Thursday , October 17 2024
Breaking News
Home / Politics / கல்வராயன் மலைவாழ் மக்களுடன்RGPRS அமைப்புகலாச்சார கலந்தாய்வு முகாம்

கல்வராயன் மலைவாழ் மக்களுடன்RGPRS அமைப்புகலாச்சார கலந்தாய்வு முகாம்

ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கதன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டு மாநிலங்களும் இணைந்து ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் (இரண்டுநாள் முகாம்) கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு முகாம் நடைபெற்றது.

மலைவாழ் மக்களின் இல்லங்களில் உண்டு, உரையாடி, தங்கி அவர்களின் நிலை அறிந்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளிமலையில் நடைபெற்ற சுதந்திரதின கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகள் தீர்மானமாக வைக்கப்பட்டது.
முன்னதாக சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏற்றப்பட்டும், மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.S.சசிகுமார், புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.சு.அமுதரசன்,

YouTube player

பஞ்சாயத்துராஜ் தேசிய செயலாளர் கடலூர் க.ரமேஷ், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் N.சுகுமார், திரு.அண்ணாதுரை, ST பிரிவு மாநில பொது செயலாளர் திரு.சரவணன், வாழப்பாடி மணிமாறன், புதுச்சேரி மாநில பஞ்சாயத்து ராஜ் பொதுச்செயலாளர்கள் அரங்க.முருகையன், கோவிந்தன், புஷ்பராஜ் இவர்களுடன் தமிழ்நாடு மற்றும் புதுவை மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பஞ்சாயத்து ராஜ் காங்கிரஸ் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,

இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு பணியை
கள்ளக்குறிச்சி மாவட்ட பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் N.செந்தில்குமார் செய்திருந்தார்.

Bala Trust

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES