Tuesday , July 1 2025
Breaking News
Home / செய்திகள் (page 63)

செய்திகள்

All News

அதிரடியாக பறந்த உத்தரவு.. அரசு மருத்துவமனை கேண்டீன்களில் ‘ரெய்டு’.. உணவு பாதுகாப்புத்துறை ஆணை!

சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களை ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் உணவக கேண்டீனில் எலி உலாவிய வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் அதிரடி உத்தரவு பறந்துள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் உணவு பொருட்களின் மீது எலி ஓடித் திரிவது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செயல்படும் கேண்டீனில் செய்யப்படும் வடை, பஜ்ஜி உள்ளிட்ட பலகாரங்களை எலி உண்ணும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன.

தலைநகரில் உள்ள முக்கியமான மருத்துமனையில் அதுவும், தனியார் மருத்துவமனைகளில் இல்லாத சிகிச்சைகள் கூட அளிக்கப்படும் சிறந்த அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கேண்டீனில், எலிகள் பலகாரங்களை சாப்பிடும் அளவுக்கா பராமரிப்பது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

நோயாளிகள் வரும் இடமான மருத்துவமனையில், எலிகள் உண்ட திண்பண்டங்களை விற்றால் அது மேலும் அவர்களுக்கு புதுப்புது ஆபத்தான நோய்களை உருவாக்கிவிடும் என்றும், எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை கேண்டின்களையும் சுகாதாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டின் தின்பண்டங்களில் எலி.. டீன் போட்ட அதிரடி உத்தரவு

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட கேண்டீனை மூட ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த தனியார் கேண்டீன் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு பொது மருத்துவமனைகளில் இயங்கி வரும் கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் டெண்டர் விடப்பட்டுள்ள கேண்டீன்களை உடனே ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் சமையற்கூடம், விற்பனையகத்தில் ஆய்வு செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளன. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை குறித்து மாவட்ட ஆட்சியர் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், உணவு பாதுகாப்பு துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கேண்டீன்கள் தொடர்ந்து முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டும், கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு அருகே உள்ள துளைகள், சாக்கடைகள் கால்வாய்கள் ஆகியவற்றை முழுமையாக மூடி, பூச்சிகள், உயிரினங்கள் உள்ளே வராமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் காலாவதி காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், உணவுப் பொருட்களை கையாள்பவர்கள் கையுறை, தலையுறை அணிந்திருப்பது அவசியம், உணவுப் பொருட்களை பூச்சிகள் நெருங்காத இடங்களில் சேமித்து வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கல்லூரி முதல்வர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்தில் தலைநகர் டெல்லியில் அதிகளவு காற்று மாசடைந்து உள்ளது என இன்றைய காற்று மாசு அளவீடுகள் வெளியீடு

டெல்லி: தீபாவளி தினத்தில் தலைநகர் டெல்லியில் அதிகளவு காற்று மாசடைந்து உள்ளது என இன்றைய காற்று மாசு அளவீடுகள் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், வாகன கட்டுப்பாடு, பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமான பணிகளுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி மாநில அரசு விதித்தது.

மேலும், காற்றின் தரத்தை சற்று மேம்படுத்த ஐஐடி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுடன் உதவியுடன் செயற்கை மழை பொழிவை உருவாக்கவும் மாநில அரசு முடிவு செய்து இருந்தது. இதற்கிடையில், டெல்லியில் இயற்கை மழை பொழிந்து ‘மிகமோசமான’ எனும் காற்றின் தரம் ‘மோசமான’ எனும் தரத்திற்கு வந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவின் படி, நச்சு நிறைந்த மூடுபனி டெல்லியை சூழ்ந்து மற்றும் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமான அளவீட்டை பெற்றது.

இன்று காலை 6 மணி நிலவரத்தின் படி, டெல்லி பவானாவில் 434ஆகவும், துவாரகா பகுதியில் 404ஆகவும், ITO பகுதியில் 430ஆகவும், முண்ட்காவில் 418ஆகவும், நரேலாவில் 418ஆகவும், ஓக்லாவில் 402ஆகவும், ரோகினி மற்றும் ஆர்கே புரம் இரண்டிலும் 417ஆகவும் இருக்கிறது. இந்த அளவீட்டின்படி தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் ‘மோசமான’ எனும் பிரிவில் இருந்ததை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு காட்டுகிறது.

டெல்லியில் தீபாவளி அன்று மாசு ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் வேறு மாசு ஏற்படுத்தும் வகையில் தீபம் ஏற்றத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொதுமக்கள் அதனை மீறி செயல்பட்டதால் இதுபோன்று காற்றின் தரம் மோசமாக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. காற்றின் தரம் 0 முதல் 50க்கும் இடைப்பட்ட அளவீடு நல்லது, 51 மற்றும் 100 திருப்திகரமானது, 101 மற்றும் 200 மிதமானது, 201 மற்றும் 300 ஏழைகள், 301 மற்றும் 400 மிக மோசமானது, 401 மற்றும் 450 கடுமையானது.

நேரு பிறந்தநாள் -டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி மரியாதை.

டெல்லி: நேரு பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் பிறந்தார் ஜவஹர்லால் நேரு. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்களித்த அவர் இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்றார்.

அவர் 1964 ஆம் ஆண்டு மே 27 அன்று காலமானார். நேருவின் பிறந்தநாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

ரோஜாவின் ராஜவான முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் உள்பட பல மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மாநிலங்களிலும் காங்கிரசார் நேருவின் போட்டோவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள கார்கே, ‘இந்தியாவை பூஜ்ஜியத்தில் இருந்து உச்சத்திற்கு கொண்டு சென்று நவீன இந்தியாவை உருவாக்கிய பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். ஜனநாயகத்தின் மிகச்சிறந்த பாதுகாவலராக திகழ்ந்தவர். அவரது முற்போக்கு சிந்தனைகள் இந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியது. அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், நாட்டு மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல், எப்போதும் ஒன்றாக வாழ ஊக்குவித்தவர் ஜவஹர்லால் நேரு.’ என்று தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் கால்வாய், மேலூர் கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மற்றும் எம்.பி.ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் மதுரை அண்ணாநகர் ரமேஷ் ஏஜென்ஸி இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

மதுரை வண்டியூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் அண்ணாநகர் ரமேஷ் ஏஜென்ஸி இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்தவர்களை ஏஜென்ஸி உரிமையாளர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

இதில் தெற்கு மண்டல அதிகாரி வெங்கடேசன், மதுரை மண்டல அதிகாரி மதுசூதனன், தெற்கு விற்பனை அதிகாரி முத்துப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சங்கர் சிமெண்ட்டின் சிறப்புகள் குறித்து கட்டிட கலைஞர்களுக்கு விளக்கி கூறினர்.

மேலும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கட்டிட கலைஞர்களுக்கும் நினைவு பரிசை ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் வழங்கினார்.

அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கு திமுக நிர்வாகிகள் ஜான்,கவியரசு, மகாலிங்கம் ஆகியோர் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்

தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரையில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கு சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜான், தொழிலாளர் அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் கா.கவியரசு, துணை அமைப்பாளர் தொழிலதிபர் வி.மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார்.!

ஏழை எளியோர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார்

மதுரை, நவம்பர்.12-

மதுரை பெத்தானியாபுரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஏழை எளிய முதியோர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேட்டிகள், சேலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழக தலைவரும், அகில இந்திய சிலம்பாட்ட கழக முன்னாள் பொதுச்செயலாளருமான முத்துராமன் ஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவிற்கு வருகை தந்தவர்களை மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் பொருளாளர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தென்மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பிறந்த நாள் விழா.!

தென்மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆளுயர மாலை அணிவித்தும், சால்வை வழங்கியும் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இவ்விழாவில்
சங்க பொதுச்செயலாளர் மாஸ்.மணி நிர்வாகிகள் டாக்டர் சின்னச்சாமி, விஜயராஜா, இன்சூரன்ஸ் ராஜா பாம்சி.கண்ணன், மன்னாதி மன்னன், முருகேசன், கவிஞர்.மணிகண்டன்,வீரமணி பிரபு, ரமேஷ்காந்தி, ஆனந்தமேரி, ராஜேந்திரன், இளமி.நாச்சியம்மாள், மலர்விழி, திவ்யபாரதி, முத்துமணி, சுமதி, சிவா, திருமாறன், பெயிண்டர் மணி, அழகுசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்

தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்காகவே ஒதுக்கி பல்வேறு உதவிகளை செய்து வரும் மதுரை அண்ணாநகர் முத்துராமன்.!

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியை சேர்ந்தவர் சமூகசேவகர் முத்துராமன். இவர் மக்கள் நீதி மையம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியாகவும் உள்ளார்.

பழைய வீடுகளை இடித்து டிராக்டர் மூலமாக அப்புறப்படுத்தி தரும் பணியில் உள்ள இவர் தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்காகவே ஒதுக்கி வருகிறார்.மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ள 13 பேருக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார்.

கல்லூரியில் சேர வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் 10 க்கும் மேற்பட்டோரை கல்லூரியில் சேர்ந்து படிக்க வைத்துள்ளார்.

தொழில் செய்ய வழியில்லாமல் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஐந்து பேருக்கு அயர்ன் வண்டி அயர்ன் பெட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நகரும் வண்டி, மேலும் தொழில் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நபர்களுக்கு நிதி உதவிகள் போன்ற பல்வேறு உதவிகளை செய்து வரும் இவர் ஒவ்வொரு தீபாவளி அன்றும் ஏழை எளியவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் மற்றும் நிதிஉதவிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மேலும் பொங்கல் பண்டிகையை ஏழைகள் கொண்டாடும் விதமாக பொங்கல் வைக்க தேவையான அரிசி மண்டவெல்லம் கரும்பு மற்றும் நிதி உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி திருநாளை முன்னிட்டு, மதுரை காந்தி மியூசியம் பகுதியில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

இதில் செந்தில், அஸ்பயர் சீனிவாசன், நாகேந்திரன், குணாஅலி, பூமிராஜா, அழகர்,மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் நம்மிடம் கூறுகையில் :- எனக்கு சிறுவயதிலிருந்தே யாருக்காகவது உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்தது.எனவே எனது சிறு வயதில் இருந்தே என்னால் முடிந்த அளவு சிறு சிறு உதவிகளை செய்து வருகிறேன். நான் பழைய கட்டிடங்களை இடித்து கட்டிட கழிவுகளை டிராக்டர் மூலமாக அப்புறப்படுத்தி தரும் பணியை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறேன். எனது ஒவ்வொரு பணியின் போதும் எனக்கு வரும் வருமானத்தின் ஒரு பகுதியை இது போன்ற சமூக சேவைகள் செய்வதற்காகவே ஒதுக்கி விடுவேன். அந்த பணத்தை சமூக சேவைக்காக ஒதுக்கி அதில் ஒரு பைசா கூட எடுக்காமல் இதுபோன்று ஏழை எளியவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறேன்.

என்னால் முடிந்த அளவு பத்துக்கும் மேற்பட்ட மேற்பட்டோரை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளேன். எனது சொந்த செலவில் 13 திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். மேலும் 5 பேருக்கு அவர்கள் சொந்தமாக தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்பதற்காக அயர்ன் வண்டிகள் வாங்கிக் கொடுத்துள்ளேன்.

மேலும் ஒவ்வொரு தீபாவளி பண்டிகை அன்று ஏழை எளியவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச்சென்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி வருகிறேன். இதுபோன்று ஏழை எளியவர்களுக்கு சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருவது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனவே எனது உயிர் உள்ளவரை இதுபோன்று தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது என முடிவெடுத்துள்ளேன் என கூறினார்.

கோடிக்கணக்கில் ரூபாய் வைத்திருக்கும் பெரிய பணக்காரர்கள் இதுபோன்று ஏழைகளுக்கு உதவி செய்யும் மனமில்லாமல் இருக்கும்போது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இவர் ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருவதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்…

அண்ணாமலை என்ன கவர்மென்ட் சர்வண்ட்டா! எதுக்கு இசட் பாதுகாப்பு? 3 கோடி செலவாகுது! விளாசிய ஜோதிமணி

அண்ணாமலை என்ன கவர்மென்ட் சர்வண்ட்டா! எதுக்கு இசட் பாதுகாப்பு? 3 கோடி செலவாகுது! விளாசிய ஜோதிமணி

கரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பை வெளியிடுவேன் என கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கரூரில் அவர் நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் அண்ணாமலை நான் பெண் என்பதால் பிழைத்துக் கொண்டு போகட்டும் என அவர் விட்டு வைத்திருப்பதாக சொல்லியுள்ளார். இதை சொல்ல அண்ணாமலை யார் என நான் கேட்கிறேன்.

அண்ணாமலையால் என்னை என்ன செய்ய முடியும். அமலாக்கத் துறையை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால் என் வீட்டிற்கு அமலாக்கத் துறையை அனுப்பட்டும். என் வீட்டில் கஞ்சி போட்ட காட்டன் புடவைகளை தவிர வேறு எதுவுமே இல்லை.

மணல் மாபியாக்களிடம் பணம் வாங்கி அண்ணாமலை போல் ஆடம்பர வாழ்க்கையை நான் வாழவில்லை. வீட்டுக்கு ரூ 3.70 லட்சம் வாடகை குறித்த கேள்விக்கு அண்ணாமலை இதுவரை பதில் சொல்லவில்லை. அவரை மாதிரி நான் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் இல்லை. பெண்கள் மீது தனிப்பட்ட முறையில் கழிச்சடை அரசியல் நடத்தும் அரசியல்வாதி அண்ணாமலை.

கர்நாடகா மாநிலத்தில் காவல் துறையில் இருந்த கருப்பு ஆடு. 2018 ஆம் ஆண்டு கர்நாடகா தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜகவின் எடியூரப்பா மூன்று நாள் முதல்வராக இருந்தார். அப்போது சிக்மக்ளூரில் எஸ்பியாக இருந்தவர் அண்ணாமலை. அப்போது எடியூரப்பா அரசை காப்பாற்றவே அண்ணாமலை ராம்நகருக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை பணம் வாங்கிக் கொண்டு வளைத்து போடுவதற்காகவே அண்ணாமலை ராம்நகருக்கு அனுப்பப்பட்டார். அது தோல்வி அடைந்தது. இதனால் அண்ணாமலை மீண்டும் சிக்மக்ளூருக்கே சென்றுவிட்டார். அங்கிருந்தும் பெங்களூர் சென்றார். காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத அண்ணாமலைக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தது, மணல் மாபியாக்களில் 60 லட்சம் ரூபாய் வாங்கியதாக சென்னை பாஜக அலுவலகத்தில் வேலை செய்தவர் வீட்டுக்கு அமலாக்கத் துறை சென்றது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கவில்லை. இது ஏன் என கேட்டதற்கும் அமலாக்கத் துறை பதில் இல்லை.

அரசு பதவியில் இல்லாத அண்ணாமலைக்கு எதற்கு இசட் பிரிவு பாதுகாப்பு, இதனால் ஆண்டுக்கு ரூ 3 கோடி செலவாகிறது. எம்பி என்ற முறையில் நான் விமானத்தில் முதல் வகுப்பில் கூட பயணிப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர் என்னை எப்படி கேள்வி கேட்கலாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணாமலையின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்.

அந்த சமயத்தில் அண்ணாமலை எங்கிருக்க வேண்டுமோ அங்கிருப்பார். கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாரிடம் நான் பணம் வாங்கியதற்கான ஆதாரம் இருந்தால் அண்ணாமலை தாராளமாக வெளியிடட்டும். அண்ணாமலையின் சொத்து மதிப்பு குறித்து நான் அவசியம் ஏற்பட்டால் வெளியிடுவேன் என ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES