Wednesday , December 17 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்பு..!
NKBB Technologies

மதுரையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்பு..!

மதுரை எல்லீஸ் நகரில் வைகை டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமை மேயர் இந்திராணி பொன்வசந்த் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.மாமன்ற உறுப்பினர் பாமா முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை முதன்மை பயிற்றுநர்களான ஜோசப் சகாயம், சுரேஷ்மரியசெல்வம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் மேலாண்மை பிரதிநிதியான ஜோ ஜார்ஜ் ஆகியோர் பயிற்றுவித்தனர்

வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இராஜன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை வைகை டிரஸ்ட் விஸ்வ யுவகேந்திரா (நியூடெல்லி) ஆகியவை ஒருங்கிணைப்பு செய்தன.

வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாதுரை மற்றும் விஸ்வ யுவகேந்திரா நிறுவனத் தலைவர் ரஜத்தாமஸ் ஆகியோர் துவக்க உரையாற்றினர்.

சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் நாராயணன், வழக்கறிஞர் அழகேசன், எஃப்.ஏ.ஐ மேலாளர் டாக்டர் பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோலை எஸ்.பரமன் நன்றியுரை கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES