
நான்கரை ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் கடன்சுமையில் மட்டுமல்ல ஊழலில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உள்ளது என அதிமுக மருத்துவரணி இணைச்
செயலாளர் டாக்டர் பா.சரவணன் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை
. இதுகுறித்து அவர் கூறுகையில்:-
இந்த நான்கரை ஆண்டு கால ஸ்டாலின் ஆட்சியில் ஏறத்தாழ 5 லட்சம் அளவில் கடன் சுமையை உயர்ந்துவிட்டது இதனால் இந்தியாவில் கடன் வாங்கும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இந்த கடன் சுமையால் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 24 லட்சம் மேல் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 3 லட்சத்து 71,000 கடன் சுமை உள்ளது.
அதே,போல் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் திமுக ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்சன் நடைபெற்று வருகிறது என்று கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கடுமையாக நாள்தோறும் மக்களுக்கு அம்பலப்படுத்துகிறார். ஆனால் இதற்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் ஸ்டாலின் மௌனம் காத்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடியை கொள்ளையடித்து விட்டு அதை எங்கே வைப்பது என்று ஸ்டாலினும், சபரீசினும் யோசித்து வருகிறார்கள் என்று அப்போதைய நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர். தியாகராஜன் பட்டவர்த்தமாக கூறினார்அப்போது வழங்கப்பட்ட பொங்கல் பரிசிலே 500 கோடி அளவில் ஊழல் செய்தார்கள். அதுபோல முட்டை கொள்முதலிலும் ஊழல் செய்தார்கள் அதேபோல டாஸ்மார் மூலம் ஆண்டு தோறும் 5400 கோடி அளவில் ஊழல் செய்கிறார்கள்.
அதேபோல சென்னையில் 5000 கோடிக்கு மழை வடிகால் பணியை செய்கிறோம் என்று கூறி அதில் பல கோடியை கொள்ளை அடித்தார்கள்.
அதேபோல நகராட்சி துறையில் பல முறைகேடு நடந்ததாக அமலாகத் துறை கூறி வருகிறது
தற்போது கூட மின் தேவைகளை உற்பத்தி செய்யாமல் தனியார் இடத்தில் கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கி உள்ளார்கள் இதன் மூலம் ஏறத்தாழ 13,000 கோடி ஸ்டாலின் குடும்ப ஜனநாயக சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது .மணலில் 5000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று உள்ளது.
அதேபோல திருவண்ணாமலையில் மூன்றே மாதத்தில் கட்டிய பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது தமிழகத்தில் தரமற்ற சாலைகள்
தரமற்ற பாலங்கள் உள்ளதாக பொதுமக்களை குற்றம் சாட்சி கூறுகிறார்கள்.இன்றைக்கு மதுரை மாநகராட்சியில் வரி முறைகேட்டில் 250 கோடி அளவில் ஊழல் நடைபெற்று உள்ளது
கடன் சுமையில்தான் தமிழகம் முதன்மை இடத்தில் இருந்தது, தற்போது ஊழல் செய்வதிலும் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது என்ற அவபெயரை ஸ்டாலின் திமுக அரசுஉருவாக்கி விட்டது
இந்த அவப்பெயரை மாற வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடியார்
ஆட்சிக்கு வரவேண்டும் அப்போது
தான் தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியாக இருக்கும் என மக்களே கூறுகிறார்கள் எனக் கூறினார்