
மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு
சென்னை ஜூலை 28
சென்னையில் சன்மார்க் சமூக கல்வி அமைச்சகம் அமைப்பின் நிறுவனர் திருமதி ஞானி ஜெயவர்மன் தலைமையில் நடைபெற்ற டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில், தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் உமா மகேஸ்வரி அவர்களின் பல்வேறு சேவைகளை பாராட்டி மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.
உடன் தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநில தலைவர் பிச்சைவேல் உள்ளார்.