
வ.உ.சி சிலைக்கு இந்து ராஷ்டிரா தலைவர் கருணாநிதி சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை
மதுரை செப் 06
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் அவரது திருவுருவச் சிலைக்கு, வேளீர் மக்கள் கட்சியின் நிறுவனர் பாலசுப்ரமணியம் தலைமையில்,அகண்ட இந்து ராஷ்டிரா தலைவர் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் ஜனநாயக மக்கள் நீதி கழக தலைவர் வேல்முருகன்,
வ உ சி இளைஞர் நலச்சங்க தலைவர் அண்ணாமலை ராஜன், முக்குலத்தோர் வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் பூவை ம.ஜெயக்குமார், வழக்கறிஞர் முருககணேஷ், பாஜக மகளிரணி தலைவி ரேணுகா தேவி, சுந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்