கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கி பொதுமக்கள் மத்தியிலே மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் வட்டார தலைவர் திரு. எஸ் தமிழ்மணி, பெத்தான் கோட்டை திரு.முருகேசன், இந்நாள் வட்டாரத் தலைவர் திரு. கே காந்தி, வழக்கறிஞர் மாநில செயலாளர் திரு. முகமது அலி, கரூர் மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலமுருகன், முன்னாள் நகர தலைவர் திரு. என். சிதம்பரம், முன்னாள் நகர தலைவர் திரு. முஜி ரகுமான், காங்கிரஸ் கட்சியின் 9வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. பஷீலா பானு, அரவக்குறிச்சி நகர காங்கிரஸினுடைய துணைத் தலைவர் திரு. AK ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். உடன் குழந்தைவேலு, கிருஷ்ணன், காளிமுத்து, மாரியப்பன், பாலு, தொண்டன் ராஜு, தங்கவேலு, பிரவீன் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்