
மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி மந்தை திடலில் பகுதி செயலாளர் சித்தன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், பேராசிரியர் ஜெயபால், வி.பி.ஆர் செல்வகுமார்,திரவியம் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன், மலைச்சாமி,விஜயகுமார், ஜஸ்டிஸ் ராஜா, நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.