நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்
பிடியதன் உருமை கொளமிகு கரியது வடிகொடு தனது அடி வழிபடும் சுபர் இடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில் வலிவலம் முறை இறையே -விநாயகர் காப்பு
இறையன்புடையீர்,
எல்லாம் வல்ல உமையொரு பாகன் திருவருளால் அமைந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு கள்ளியழ சித்தர் குருபூஜை விழா நிகழும் மங்களகரமான விசுவாவசு ஆண்டு வைகாசி மாதம் 27 – ஆம் நாள் (10.08.2025) செவ்வாய்கிழமை பௌர்ணமி திதியில் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகர் வழிபாடு, கள்ளிபழ சித்தர் குருபூஜை விழா வெகுவிமர்சையாக நடையெறுவதால் ஆன்மீக சான்றோர்கள், பக்தகோடிகள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு குருபூஜை விழாவை சிறப்பான முறையில் நடத்தி கொடுத்து சித்தரின் அருளையும், அருட்பிரசாதத்தையும் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்
ஊர் பொதுமக்கள், ஆத்துமேடு – அரவக்குறிச்சி.
குறிப்பு : 10.06.2025 செவ்வாய்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் சித்தர் குருபூஜை அன்னதானம் நடைபெறும்.
அன்னதானத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, பால், தயிர், காய்வகைகள் கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.
சென்ற ஆண்டு அன்னதானத்திற்கு நிதியுதவி, பொருளுதவி வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசயோகிக் கருவூறார் சித்தர்,
+91 9487984146.




