Friday , July 18 2025
Breaking News
Home / கரூர் / தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் சங்கத்தின் சார்பில் தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் ஆகியன வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேற்படி சங்கத்தின் செயலாளர் திரு.ஆர். பெருமாள் அவர்கள்
வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கரூர் அமிர்தா டிரஸ்ட் சேர்மேன், வை.க.முருகேசன் மற்றும் சீடு டிரஸ்ட் இயக்குநர் வை.திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

மேலும் திரு. S.பாலச்சந்தர், காமராஜர் இளைஞர் மன்ற தலைவர், திரு.இரா பாலமுருகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்,கரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு இயக்க உறுப்பினர் கரூர்மற்றும் இந்திரா டிரஸ்ட் செயலாளர் R.உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் 56 பயனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வின் நிறைவாக பயனாளி திருமதி.முனியம்மா நன்றி கூறினார்.

Bala Trust

About Admin

Check Also

காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 350 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை விருந்து – அவிநாசி நகர காங்கிரஸ் கமிட்டி

அவிநாசி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாட்டிலும் அவிநாசி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் கார்த்திகேயன் அவர்கள் ஏற்பாட்டிலும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES