
பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை
மதுரை செப்டம்பர்
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 310-வது பிறந்த நாளை முன்னிட்டு, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஆணைக்கிணங்க, மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில், பூலித்தேவரின் திருவுருவப்படத்திற்கு, மாநில தலைமைக் கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில் மாநில துணைத்தலைவர் எஸ்.முத்துராமலிங்கம், மதுரை மண்டல தலைவர் எஸ்.எம். நாகராஜ் தேவர், மாநில தொழிற்சங்க பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் ராமையாத்தேவர், இராசு, சண்முகவேல், சேகர், அர்ச்சுனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்