Wednesday , July 30 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 26)

Kanagaraj Madurai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்ற மதுரை மேலமாசி வீதி – வடக்கு மாசி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் …

Read More »

மதுரையில் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் விவசாயிகள் கலந்துரையாடல்

மதுரை, நவம்பர்.17- மதுரையில் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில் :- விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் பதிவேற்று தரும் அதிகாரிகளுக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிராமப்புற கூட்டுறவு வங்கிகளில் உள்ள இ.சேவை மையங்களுக்குவிவசாயிகள் சிட்டா, …

Read More »

திருச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக தேசிய பத்திரிகையாளர் தின விழா

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் திருச்சியில் தேசிய பத்திரிகையாளர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநிலத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் சத்யநாராயணன் வரவேற்று பேசினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பங்கேற்று பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் மாநிலத்தலைவர் சரவணனுக்கு மதுரை மாவட்ட தலைவர் கணேஷ் மற்றும் செயலாளர் ரவிச்சந்திரபாண்டியன், இணைச்செயலாளர் பாண்டியன், துணைத்தலைவர் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், கார்த்திக் உள்பட ஏராளமான நிர்வாகிகள் …

Read More »

மதுரையில் பெருந்தலைவர்,நடிகர்திலகம் அறக்கட்டளை சார்பாக கார்த்தி சிதம்பரம் பிறந்த நாள் விழா.!

பெருந்தலைவர்,நடிகர்திலகம் அறக்கட்டளை சார்பாக கார்த்தி சிதம்பரம் பிறந்த நாள் விழா மதுரை, நவம்பர்.16- முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு,மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர், நடிகர்திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் குருபிரசாத், லெனின், முத்துக்குமார்,கனகராஜ் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. முன்னதாகஅருள்மிகு காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் …

Read More »

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற மதுரை ஜல்லிக்கட்டு ஆஃப் ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு பிரார்த்தனை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி போட்டி மற்றும் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற மதுரையில் சிறப்பு பிரார்த்தனை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ஆஃப் ரோட்டரி சங்கம் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரியவா விக்ரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஹன்யாஸம், …

Read More »

தரமில்லாத விதைகளை வழங்கும் தோட்டக்கலைத்துறை: ஆபெல் மூர்த்தி கண்டனம்.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி பேசுகையில் :- தோட்டக்கலைத்துறை சார்பாக தரும் விதைகள் தரமாக இல்லாததால் முளைப்பதில்லை. மேலும் சான்றிதழ் இல்லாமல் விவசாயிகளுக்கு விதைகளை வழங்கி வருகின்றனர். தரமில்லாத விதைகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே சான்றிதழ் பெறாத விதைகளை …

Read More »

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் கால்வாய், மேலூர் கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மற்றும் எம்.பி.ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் மதுரை அண்ணாநகர் ரமேஷ் ஏஜென்ஸி இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

மதுரை வண்டியூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் அண்ணாநகர் ரமேஷ் ஏஜென்ஸி இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை ஏஜென்ஸி உரிமையாளர் ரமேஷ் வரவேற்று பேசினார். இதில் தெற்கு மண்டல அதிகாரி வெங்கடேசன், மதுரை மண்டல அதிகாரி மதுசூதனன், தெற்கு விற்பனை அதிகாரி முத்துப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சங்கர் சிமெண்ட்டின் சிறப்புகள் குறித்து கட்டிட கலைஞர்களுக்கு …

Read More »

அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கு திமுக நிர்வாகிகள் ஜான்,கவியரசு, மகாலிங்கம் ஆகியோர் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்

தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரையில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கு சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜான், தொழிலாளர் அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் கா.கவியரசு, துணை அமைப்பாளர் தொழிலதிபர் வி.மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை கூறினர். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Read More »

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார்.!

ஏழை எளியோர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார் மதுரை, நவம்பர்.12- மதுரை பெத்தானியாபுரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஏழை எளிய முதியோர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேட்டிகள், சேலைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழக தலைவரும், அகில இந்திய சிலம்பாட்ட கழக முன்னாள் பொதுச்செயலாளருமான முத்துராமன் ஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கு …

Read More »
NKBB TECHNOLOGIES