Friday , December 19 2025
Breaking News
Home / செய்திகள் / திருச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக தேசிய பத்திரிகையாளர் தின விழா
NKBB Technologies

திருச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக தேசிய பத்திரிகையாளர் தின விழா

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் திருச்சியில் தேசிய பத்திரிகையாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு மாநிலத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் சத்யநாராயணன் வரவேற்று பேசினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பங்கேற்று பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.

விழாவில் மாநிலத்தலைவர் சரவணனுக்கு மதுரை மாவட்ட தலைவர் கணேஷ் மற்றும் செயலாளர் ரவிச்சந்திரபாண்டியன், இணைச்செயலாளர் பாண்டியன், துணைத்தலைவர் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், கார்த்திக் உள்பட ஏராளமான நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இவ்விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்றனர். முடிவில் பொருளாளர் காமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES