Friday , December 19 2025
Breaking News
Home / செய்திகள் / உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற மதுரை ஜல்லிக்கட்டு ஆஃப் ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு பிரார்த்தனை
NKBB Technologies

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற மதுரை ஜல்லிக்கட்டு ஆஃப் ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு பிரார்த்தனை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி போட்டி மற்றும் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற மதுரையில் சிறப்பு பிரார்த்தனை

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ஆஃப் ரோட்டரி சங்கம் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெரியவா விக்ரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது. இதை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரை இறுதி போட்டியிலும், இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலக கோப்பை போட்டோ வைத்து அர்ச்சனை செய்து தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் தலைவர் நெல்லை பாலு, செயலாளர் எஸ்.எஸ்.சரவணன், பொருளாளர் கதிரவன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES