Friday , December 19 2025
Breaking News
Home / செய்திகள் (page 4)

செய்திகள்

All News

கரூர் அருகே செய்த சாதனைகளை சொந்த நிதி செயல்பாட்டு அறிக்கையாக புத்தகம் வெளியீடு & விருந்துடன்…

கரூர் அருகே கம கமன்னு விருந்து அனைவருக்கும் சிக்கன் பிரியாணி | பஞ்சாயத்து தலைவர் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து ஊரே ஒன்று கூடி விழா எடுத்த சுவாரஸ்யம் | வீடு வரை கொண்டு சென்று வழி அனுப்பிய பொதுமக்கள் | செய்த சாதனைகளை சொந்த நிதி செயல்பாட்டு அறிக்கையாக புத்தகம் | 40 பக்கம் கொண்ட புத்தகத்தினை வெளியிட்ட பஞ்சாயத்து தலைவர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் ஊராட்சி ஒன்றியம், வரவணை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கந்தசாமி, இவரை கந்தசாமி ஐயா என்று தான் சொல்வார்கள். அந்த அளவில் மதிப்புமிக்க ஒரு எளியவர், முன்னாள் தலைமை ஆசிரியரும் கூட, இவரிடம் படித்த நல்ல மாணவர்கள் ஒரு அமைப்பாகவும், இவருடைய மகன் நரேந்திரன் கந்தசாமி, இதே பகுதியில் பசுமைக்குடி என்கின்ற தன்னார்வ அமைப்பினை நடத்தி வரும் நிலையில், ஏராளமான பகுதிகளில் சொந்த செலவில் மரங்களை நட்டு பின்னர் அதற்காக தினந்தோறும் தண்ணீரையும் ஊற்றி வரும் நிலையில், தற்போது அந்த மரக்கன்றுகள் அனைத்தும் மரங்களாகவே உருவெடுத்துள்ளன. இதுமட்டுமில்லாமல், பசுமைக்குடி மூலமாக விளைவித்த காய்கறிகளை, கொரோனா 1, கொரோனா 2 ஆகிய காலங்களில் வீடுகளிலே இருந்த மக்களுக்கு சுமார் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல், இலவசமாக காய்கறிகளையும் தந்த ஒரு சமூக செயல் தமிழக அளவில் மிகுந்த பெயர் பெற்றது.

இப்புகழ்பெற்ற பசுமைக்குடி தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் கந்தசாமியின் தந்தை, கந்தசாமி ஐயா அவர்களுடைய பஞ்சாயத்து தலைவர் பதவி நேற்றுடன் முடிவடைந்ததோடு, அவருக்கு ஊரே ஒன்று கூடி விழா எடுத்ததோடு, அனைவருக்கும் சிக்கன் பிரியாணிகளையும் பரிமாறப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல், அவருக்கு பிரிவு உபச்சாரவிழா ஒன்றினை நடத்தி, அந்த விழா முடிந்த கையோடு அனைவரும் ஒன்று கூடி, அவரை வீடு வரை கொண்டு சென்று வழி அனுப்ப பட்ட சம்பவமும் மிகுந்த சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.

#varavanaikandasamy #narendrankandasamy #pasumaikudi #ilangyarkural

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு உதவி மையம் – கரூர்

கரூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு உதவி மையம் தொடங்கி கடந்த ஓராண்டு காலமாக சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் 40 குடும்ப ஓய்வூதியர்கள் இருக்கிறார்கள். இன்று (06/01/2025) பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பொருள்களை தலைவர் திரு.D.ரெங்கராஜீ அவர்கள் தலைமையிலும் மற்றும் செயலாளர் திரு.P.வேலுசாமி, பொருளாலர். K.வீரமலை, து.தலைவர்கள் திரு.A. வடிவேல், திரு.P. முருகையன், துணை செயலாளர் திரு. K.கிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பனர்கள் முன்னிலையிலும் 40 குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டது.

உதவி மையம் சார்பாக,

  1. ஓய்வு பெற்று உடல் நலம் பாதிக்கப்படோருக்கு உடன் இருந்து மருத்துவமனையில் சேர்க்க உதவிகள் செய்வது.
  2. மருத்துவமனை செலவுகளை பெற படிவம் தயார் செய்து கரூவூலத்தில் கொடுத்து மேல் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் கூறுவது.
  3. காவல் ஆளினர்கள் இறந்துவிட்டால் அவர் துணைவியாருக்கு ஓய்வூதியம் பெற்றுத்தர அனைத்து நடவடிக்கை மேற்க்கொள்வது போன்ற கடமைகளை செய்வது.

YouTube player

#police #karur #retiredpolicehelp #velusamy #ilangyarkural

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவை பதவி விலகக் கோரி காங்கிரஸ் சார்பில் மனு…

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தரகுறைவாக பேசியதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அமைச்சர் அமித்ஷா பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மற்றும் அவர் வகித்து வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் பதவியை விடுவிக்க கோரியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி பேரணியாக சென்று கரூர் மாவட்ட வருவாய் துறை அவர்களிடம் மனு அளித்தபோது…

முன்னாள் அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மருது பாண்டியனுக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வாழ்த்து…

இந்திய மருத்துவ கவுன்சில் அறுவை சிகிச்சை பிரிவு, தேசிய துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன், டாக்டர் மருதுபாண்டியன் அவர்களை, மதுரையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநில தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமையில் மதுரையில் சந்தித்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆர் ராமன், வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, முருகேசபாண்டியன், விவேகானந்தன், பழனிவேல்முருகன், சரவணன், சாய் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….

வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் கிளப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

YouTube player

கரூர் விஷன் 2030, கரூரின் வளர்ச்சிக்காக பல சங்கங்களை ஒன்றிணைத்து அதில் எங்கள் சங்கத்தையும் இணைத்தமைக்கு எங்களது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– அரவக்குறிச்சி ரோட்டரி கிளப்.

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்:

*வயது மற்றும் சொந்த ஊர்*: கரூர் மாவட்டம், குறிப்பாக பால்வார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோகாஸ்ரீ.

*குடும்பம்*: அவளது தந்தை கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார், டைல்ஸ் பதித்து வருகிறார், மேலும் அவளது பாடும் ஆசைக்கு அம்மா உறுதுணையாக இருக்கிறார்.

*கல்வி மற்றும் பாடிய அனுபவம்*: யோகாஸ்ரீ பல்வேறு கோவில் திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மாநில அளவிலான போட்டியில் கூட வெற்றி பெற்றதாக குறிப்பிட்டார்.

*சவால்கள்*: யோகாஸ்ரீயின் குடும்பம் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்கிறது, இதனால் அவர் பாடும் பாடத்தைத் தொடர்வது சவாலானது. அவளுடைய ஆசிரியர் இலவச வகுப்புகளை வழங்கினார், ஆனால் கூட, அவளுடைய தந்தை ₹1 கட்டணத்தை வாங்க சிரமப்பட்டார்.

*உத்வேகம் மற்றும் இலக்குகள்*: யோகாஸ்ரீயின் ரோல் மாடல் ஸ்ரேயா கோஷல்

மேலும் அவர் தனது ஆசிரியரின் ஊக்கத்தால் ஈர்க்கப்பட்டு புகழ்பெற்ற பாடகியாக வேண்டும் என்று கனவு காண்கிறார். போட்டியில் வெற்றி பெற்று தன் குடும்பத்தின் நிலையை மேம்படுத்துவதே அவளது குறிக்கோள்.

யோகஸ்ரீயின் மன உறுதியும் பாடும் ஆர்வமும் தான் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும் மிளிர்கிறது.

கரூரில் இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா 7 நாள் வகுப்பு…

🤩 இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

💥 கரூரில் இலவசமாக ஈஷா யோகா 7 நாள் வகுப்பு
இளைஞர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது ! 🤩

📅 நவம்பர் 20-26, 2024
⌚ 6:00 – 8:30 AM / 6:00 – 8:30 PM
🧘🏻‍♀️ வயது: 15 முதல் 25 வரை

சிறப்பம்சங்கள்:
🧐 கவனக் குவிப்பு & ஞாபக சக்தி மேம்படும்
🧘 உடல் & மன நலன் மேம்படும்
🤓 பயம், பதற்றம் & மன அழுத்தத்திலிருந்து வெளிவர உதவும்
🔱 சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கு தீட்சை

உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் ! 🌟

இலவச பதிவிற்கு:
https://isha.co/youthiyp-karur

🌍 இடம்: கொங்கு வேளாளர் திருமண மண்டபம் (சின்ன கொங்கு மண்டபம்), 5வது குறுக்கு சாலை, காமராஜபுரம், கரூர்
📞 8300062000, 8838291255

📍 கூகுள் மேப்: https://maps.app.goo.gl/mrwcfJMsvwUMgYKu5

மதுரையில் ஏழை, எளிய மக்களுக்கு 250-வது நாளாக உணவளித்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை..

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கும், அவர்களுடன் உடன் இருப்பவர்களுக்கும் தொடர்ந்து இடைவிடாமல் 250-வது நாளாக உணவு வழங்கி வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மதுரையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்கள் வைகை ஆற்றை காக்கும் விதமாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடம் அருகே உள்ள கல்பாலத்தில் ஆகாயத்தாமரைகள் தொடர்ந்து அகற்றி வருகிறார்.

மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் அவர்களை கவனித்து வரும் காப்பாளர்கள் என தினமும் ஆயிரம் பேருக்கு,உணவு, குடிநீர், மற்றும் பழங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த அருமையான சேவையால் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர்கள் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களின் தலைமையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் 250-வது நாள் உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஜஸ்டின் பிரபாகரன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு, குடிநீர், ஆப்பிள் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

உணவு வாங்குவதற்காக வந்த ஒரு முதிய பெண்மணி நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களை நோக்கி கும்பிட்டு, நீங்கள் வழங்கும் உணவு தினமும் பயனுள்ளதாக இருப்பதாகவும், உங்களது சேவை தொடர்ந்து நடைபெற கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என கூறிச் சென்றதை காணும் போது நெகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிகழ்வில் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் ராஜபாண்டி, ஹார்விபட்டி குமார் உட்பட நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உலகத்திற்கே வழிகாட்டும் கரூர் ரங்கா பாலிமர்ஸ்…

(09.11.2024) கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு ஆர். காந்தி, மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி மற்றும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்கள் ஆகியோர் ஸ்ரீ ரங்கா பாலிமர் நிறுவனத்தைப் பார்வையிட்டனர்.

ஸ்ரீ ரங்கா பாலிமர் வீணான பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தரமான ஆடைகளைத் தயாரித்து உலக அளவில் தடம் பதித்து வருகிறது. சிறப்பான ஆடைகளைத் தயாரிப்பதோடு சுற்றுச்சூழலையும் காப்பது சிறப்பு. சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் உலகமே திணறிக்கொண்டிருக்கும் போது உலகத்திற்கே வழிகாட்டும் ரங்கா பாலிமர்ஸ் நிறுவனம் கரூரில் அமைந்திருப்பது பெருமை என்று கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்கள் தெரிவித்தார்.

உடன் கரூர் மாவட்ட ஆட்சியர்,கைத்தறித் துறை செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பாக பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டம்…

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில் பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டம்.

   
மதுரை & தேனி மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைததுப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில் மதுரை மீனாட்சி பஜார் அருகில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வஙகி தலைமை அலுவலகம் முன்பு மதுரை மாவட்ட கௌரவ செயலாளர் ஆ.ம.ஆசிரிய தேவன் தலைமையிலும்,மதுரை மாவட்ட கௌரவ தலைவர் ராஜா,மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் முன்னிலையில் , 2021 விவசாய கடன் தள்ளுபடி தொகை அரசிடம் இருந்து வந்துள்ளதை நீண்ட நாட்களாக சங்கங்களுக்கு வழங்காமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும், விவசாய கடன் மற்றும் மகளிர் குழு கடன் வழங்குவதில் தேவையில்லாமல் முட்டுக்கட்டை ஏற்படுத்தி காலந் தாழ்த்துவதை கை விட வேண்டும், 

தொடக்க நிலை சங்கங்கள் பெறும் கடன்களுக்கு கூடுதல் வட்டி வசூலிப்பதை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சங்கங்களை நசுக்கும் மற்றும் பணியாளர்களை மிரட்டும் மதுரை மாவ‌ட்ட மததிய கூட்டுறவு வஙகி நிர்வாகத்தை கண்டித்தும்  வரும் 11,ஆம் தேதி காலை மாபெரும் பெருந்திரள் முறையீடு போராட்டமும் அடுத்து 18-ஆம் தேதி அதே அலுவலக வளாகம் உள்ளே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தமும் நடைபெறவுள்ளது. 

இந்த தொடர் போராட்டத்தில் மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் ரேஷன் கடை பணியாளர்கள் தவிர்த்து அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்வார்கள் என தேனி மாவட்ட செயலாளர் காமராஜ் பாணடியன் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர் பாரூக்அலி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES