Wednesday , December 17 2025
Breaking News
Home / செய்திகள் (page 5)

செய்திகள்

All News

மதுரையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்பு..!

மதுரை எல்லீஸ் நகரில் வைகை டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமை மேயர் இந்திராணி பொன்வசந்த் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.மாமன்ற உறுப்பினர் பாமா முருகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை முதன்மை பயிற்றுநர்களான ஜோசப் சகாயம், சுரேஷ்மரியசெல்வம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் மேலாண்மை பிரதிநிதியான ஜோ ஜார்ஜ் ஆகியோர் பயிற்றுவித்தனர்

வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இராஜன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை வைகை டிரஸ்ட் விஸ்வ யுவகேந்திரா (நியூடெல்லி) ஆகியவை ஒருங்கிணைப்பு செய்தன.

வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாதுரை மற்றும் விஸ்வ யுவகேந்திரா நிறுவனத் தலைவர் ரஜத்தாமஸ் ஆகியோர் துவக்க உரையாற்றினர்.

சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் நாராயணன், வழக்கறிஞர் அழகேசன், எஃப்.ஏ.ஐ மேலாளர் டாக்டர் பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோலை எஸ்.பரமன் நன்றியுரை கூறினார்.

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் சங்கத்தின் சார்பில் தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் ஆகியன வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேற்படி சங்கத்தின் செயலாளர் திரு.ஆர். பெருமாள் அவர்கள்
வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கரூர் அமிர்தா டிரஸ்ட் சேர்மேன், வை.க.முருகேசன் மற்றும் சீடு டிரஸ்ட் இயக்குநர் வை.திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

மேலும் திரு. S.பாலச்சந்தர், காமராஜர் இளைஞர் மன்ற தலைவர், திரு.இரா பாலமுருகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்,கரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு இயக்க உறுப்பினர் கரூர்மற்றும் இந்திரா டிரஸ்ட் செயலாளர் R.உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் 56 பயனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வின் நிறைவாக பயனாளி திருமதி.முனியம்மா நன்றி கூறினார்.

ஆனையூரில் உள்ள, மதுரை மாநகராட்சி வீடட்றோர் தங்கும் இல்லத்தில், டாக்டர் அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில், இலவச தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா

ஆனையூரில் உள்ள, மதுரை மாநகராட்சி வீடட்றோர் தங்கும் இல்லத்தில் உள்ளவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில், இலவச தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா, அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு மைய தலைவர் புஷ்பம் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வர் எம் கண்ணன், பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி, துணைத்தலைவர் சுசிலா குணசீலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்கிராட் நிர்வாக இயக்குனர் எம் சுப்புராம், துவக்க உரையாற்றினார். பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட, 3-வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வகணபதி கணேசன், மாமன்ற உறுப்பினர் பாபு, தி மு க வட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து,புத்தாடைகளையும் சிறப்பு உணவையும், வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெட்கிராட் துணைத்தலைவர் சுசிலா குணசீலி, காப்பாளர் ஜெயலட்சுமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தானப்ப முதலி தெரு இல்லத்தின் காப்பாளர், இந்திரா நன்றியுரை கூறினார்.

அயல்நாட்டில் பணிபுரிபவர்களால் நிச்சயமாக ஒரு மாற்றத்தினை உருவாக்க முடியும் – நரேந்திரன் கந்தசாமி

ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதே அரிதாகிப்போன காலத்தில், ஒரு ஊர் மட்டுமல்ல 16 ஊர்களடங்கிய ஊராட்சியில், வாய்ப்பு கிடைத்த இடங்களில் முடிந்த அளவு சொந்த நிதியின் மூலம் வேலைகளை மக்களுக்கு செய்துள்ளோம்
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கிராமத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

ஒரு நாட்டுக்கு அடிப்படை கிராமம் தான். கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும். எனவே கிராமத்தை முன்னேற்ற வேண்டும் முன் மாதிரியான கிராமத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி இது. ஒரு கிராமத்தின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி தெருவிளக்கு வசதி என்பதனை மட்டுமல்லாமல் கிராம மக்களின் உடல் நலம், தொழில் வாய்ப்புகள், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாடு, கல்வி என்று ஒரு ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சொந்த நிதியில் முடிந்தளவு வேலைகளை செய்துள்ளோம்.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு ஆனால் தேடிய செல்வத்தை மக்களுக்கும் கொடு என்று என்னைப் பணித்த எனது தந்தை அவரால் முடிந்த பணிகளை அங்கிருந்து செய்ததை பற்றிய பதிவு இது. இதனை விட இன்னும் அதிகமாக செய்து இருப்பவர்கள் ஏராளம் இருப்பார்கள். குறைந்த பொருளாதாரத்தில் புதுமாதிரியான மாற்றத்தை விளைவித்தவர்கள் நிறைய இருப்பார்கள்.

இச்செய்தியை படிக்கும் எவரேனும் அதுபோன்ற வித்தியாசமான கிராம மேம்பாட்டுக்கான முயற்சி கண்டிருந்தால் அதனை எங்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். எங்களது கிராமத்தில் இருந்து சாத்தியமா என்று பரீட்சித்து பார்க்க வேண்டும். அதை மக்களுக்கு கொண்டு சென்றடைய அதனால் எனது கிராமம் முன்மாதிரி கிராமமாக மிளிர முயற்சியினை எடுக்க வேண்டும். ஆதலால் செய்தியை பகிர்ந்து மேலும் இது போன்று பலர் செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.

அயல்நாட்டில் பணிபுரிபவர்களால் நிச்சயமாக ஒரு மாற்றத்தினை உருவாக்க முடியும் என்பது அனுபவபூர்வமான ஆழமான நம்பிக்கை. அரசு பள்ளியில் பயின்று, குக் கிராமத்தில் பிறந்து அயல்நாடு வந்திருக்கும் எவரேனும் இது போன்ற சில கிராமங்களை தத்தெடுத்து அல்லது அவர் பிறந்த கிராமத்தினை முன்னேற்றுவதற்கு ஏதேனும் வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருந்தார் வாருங்கள் நாம் இணைந்து பல முன்மாதிரி கிராமங்களை உருவாக்குவோம்.


நரேந்திரன் கந்தசாமி
பசுமைக்குடி தன்னார்வ இயக்கம்.

கரூர், திண்டுக்கல் மாவட்ட பகுதிகளை வளமாக்கும் பரப்பலாறு அணைக்கட்டு

ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல், கரூர் மாவட்டங்களின் விவசாய விளை நிலங்களுக்கும் குறிப்பாக ஒட்டன்சத்திரம் நகர மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது பரப்பலாறு அணையாகும். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலைப்பகுதியின் வடகிழக்கில் அமைந்துள்ள பாச்சலூர் மலைப்பகுதியில் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராமத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வடகாடு கிராமம் பாச்சலூர் மலைப்பகுதியில் பரப்பலாறு நதியாக தோன்றி பழனிக்குச் செல்லும் வழியில் உள்ள விருப்பாச்சிக்கு அருகில் தலைகுத்து என்ற தலையூத்துக்கு கீழாக நங்காச்சி ஆறு எனப் பெயர் பெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் இந்த ஆறு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒட்டனைக்கட்டு வரை சென்று விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தருகிறது. இந்துக்களின் புனித தலமாக வடக்கே காசியின் தெய்வீகத்தையும் மகத்துவமும் இருப்பதால் பக்தர்கள் இதை ”நல்காசி ஆறு” என்றே இன்னமும் அழைக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மட்டும் அல்லாது தமிழகத்தில் பல கோவில்களுக்கு இங்கு வந்து தீர்த்தம் எடுத்துச் சென்று தங்கள் குலதெய்வம் உள்ளிட்ட இதர தெய்வங்களுக்கும் தீர்த்தாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். நல்காசி ஆறு எனப்படும் நங்காஞ்சியாறு காவேரி நதியின் கிளை நதியான அமராவதி ஆற்றின் உபநதியாகும். பரப்பலாற்றின் குறுக்கே தலையூத்துக்கு மேலே நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் ஒட்டன்சத்திரம் பாச்சலூர் மலைப்பாதையில் அமைந்துள்ளது. நங்காஞ்சி ஆற்றினால் பயன்பெற்று வந்த 1373 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு உறுதியான பாசன நீர் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் கூடுதலாக 1000 ஏக்கர் பாசன நிலங்களை கூடுதல் பயன் பெறுவதற்கும் பரப்பலாறு நீர்த்தேக்கத் திட்டம் 1971ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரூ.10.40 லட்சம் மதிப்பிலான தொகை செலவு செய்யப்பட்டு 1974ம் ஆண்டு நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டது.

பரப்பலாறு நீர்த்தேக்கம் முற்றிலும் கற்களால் கட்டப்பட்டுள்ளது அணையின் சிறப்பு அம்சமாகும். அணையின் மொத்த நீளம் 81.08 மீட்டர் ஆகும். ஆற்றின் ஒரு மடையின் அளவு அதாவது ஒரு கண் அளவு 1.52 மீட்டர் ஞ் 1.83 மீட்டர் அளவில் உருவாக்கி அமைக்கப்பட்டுள்ளது. நீர் வெளியேற்றப்படும் அணைப்பகுதியில் 3 கண்கள் 9.75 மீட்டர் ஞ் 4.57 மீட்டர் என்கிற அளவுகளில் வளைவு கதவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்று மடையின் அடித்தளம் மட்டம் 527.305 மீட்டர். அணையின் நிறை நீர் மட்டம் 554.780 மீட்டர். உச்சநீர் மட்டம் 555.65 மீட்டராகும். அணையின் கரை மேல் மட்டம் 557.780 மீட்டராகும். அணைக்கட்டின் கொள்ளளவு உயரம் 27.44 மீட்டராகும். இந்த அணையின் நீர் வழிந்தோடி உலகின் பிரபலமான அணைக்கட்டுகள் அமைந்துள்ள பிலிப் பக்கெட் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது அணைக்கு கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும்.

பரப்பலாறு அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மி.கன அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து போதிய நீர் வரத்து கிடைக்கப் பெறும் அணையின் வண்டல் மண்படிந்து நீரின் கொள்ளளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் நீரியல் ஆய்வகம் 2002ம் ஆண்டில் விரிவான ஆய்வு மேற்கொண்டு அணையின் கொள்ளளவு குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. 2002ல் நீரியல் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் 197.95 மி.கன அடி உள்ள பரப்பலாறு அணையின் நீர் மட்டம் 4.021852 மி.க. மீட்டர் குறைந்துள்ளதாகரும் 1.58409 மி.கன மீட்டர் வண்டல் மண் படிந்துள்ளது எனவும் அறக்கை சமர்பிக்கப்பட்டது. நீரியல் ஆய்வக அறிக்கை எண் 1/2003 மதிப்பிட்டுள்ள 1584090 கன மீட்டர் வண்டல் மண்ணை அப்புறப்படுத்த 12.55 லட்சம் தொகைக்கான மதிப்பீடு தயாரித்து திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 1974ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பரப்பலாறு அணையின் மூலமாக 1504 டன் கூடுதல் உணவு உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த அணைக்கட்டின் நீர் ஆதாரத்தின் மூலமாக ஒரு டன் உணவு உற்பத்திக்கு ரூ.6300 மட்டுமே செலவாகும் என விவசாயத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு ஏக்கருக்கு மொத்த செலவு ரூ.4480 மட்டுமே எனவும் விவசாய வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பரப்பலாறு அணைக்கட்டின் நீர்வள ஆதாரத்தின் மூலமாக திண்டுக்கல், கரூர்  ஆகிய இரு மாவட்டங்களில் 9 அணைக்கட்டுகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாள்குளம் அணைக்கட்டு, சடையகுளம் அணைக்கட்டு, ராமசமுத்திரம் அணைக்கட்டு, ஜவ்வாதுபட்டி பெரியகுளம் அணைக்கட்டு, ஜவ்வாதுபட்டி அணைக்கட்டு, வரதாகன் அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுகள் மூலமாக சுமார் 1278 ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பயனடைந்து வருகிறது. பரப்பலாறு அணையின் மூலமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கோறையூத்து அணைக்கட்டு ஒட்டனை அணைக்கட்டு, அரவக்குறிச்சி அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுகள் மூலமாக சுமார் 1323 ஏக்கர் நிலம் பாசனப்பயன்பாடு பெற்று வருகிறது. Courtesy: https://www.thinaboomi.com/news/2014/05/25/13947.html

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரியும், அனைத்து முக்குலத்தோர் நலக் கூட்டமைப்பு தலைவருமான எம்.சம்பத் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரியும், அனைத்து முக்குலத்தோர் நலக் கூட்டமைப்பு தலைவருமான எம்.சம்பத் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை,முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரியும், அனைத்து முக்குலத்தோர் நலக் கூட்டமைப்பு தலைவருமான எம்.சம்பத் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

திருப்பரங்குன்றத்தில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கும் திட்டம்..

மதுரை திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணியை இன்று முதல் ஆறு நாட்களுக்கு வீடு வீடாக சென்று 50 க்கும் மேற்பட்ட குழுவினர் களப்பணியில் ஈடுபட உள்ளனர்.

மருத்துவ சேவை செய்து வரும் இந்த குழுவினருக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனத் தலைவர் ஸ்டார் குரு அவர்கள் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதற்கான தொடக்க விழா திருப்பரங்குன்றத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் டாக்டர் ஏ.பூபேஷ்குமார் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் ஹார்விப்பட்டி குமார் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம்..!

NSS சிறப்பு முகாம் நிறைவு விழா
பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் என் எஸ் எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம் மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 30/09/2024 முதல் 06/10/2024 முடிய நடைபெற்றது.


பள்ளி வளாக தூய்மை, மருவத்தூர் முனியப்பா கோவில், அய்யனார் கோவில் உழவாரப்பணி 50 மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடுதல் , போதைப்பொருள் விழிப்புணர்வு
பேரணி , முழு சுகாதாரம் கழிப்பறை பயன்படுத்துதல் விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம் பிளாஸ்டிக் ஒழிப்பு மஞ்சப் பையின் பயன்பாடு ,மழைநீர் சேகரிப்பு பேரணி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ,உயர்க் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளையும் மிகவும் சிறப்பாக நடத்திய முதுகலை ஆசிரியர் மற்றும் NSS திட்ட அலுவலர் ப.பஞ்சாபகேசன் அவர்களை NSS மாவட்ட தொடர்பு அலுவலர் K.செல்ல பாண்டியன் ,மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சத்யா முருகன், தொழிற்கல்வி ஆசிரியர் பு.செங்குட்டுவன் ,முதுகலை ஆசிரியர் க. ஜெயராமன் வாழ்த்து தெரிவித்தனர்.என்எஸ்எஸ் திட்ட உதவி அலுவலர் ப.வேல்முருகன் நன்றி தெரிவித்தார் .

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES