
மதுரையில் வேங்கடாச்சலம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை,அக்.29-
மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் டிரஸ்ட் அலுவலகத்தில் ஏழை எளிய முதியோர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மெஜூரா கோட்ஸில் பணிபுரிந்த வெங்கடாசலம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது துணைவியார் வசந்தா மற்றும் ஆவரது மகன் இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பாண்டியராஜன், திருமதி செண்பகாதேவி பாண்டியராஜன், பிரிமால்,பிரிஜித் ஆகியோர் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் அன்னதானத்தை வழங்கினார்கள்.
இந்நிகழ்விற்கு
மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் தலைமை வகித்தார். டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்