Monday , August 4 2025
Breaking News
Home / Admin (page 67)

Admin

ஊரடங்கில் முதியோர்களுக்கு மளிகை பொருட்கள் கொடுத்து உதவிய கல்லூரி உதவி பேராசிரியை…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வில் ராஜபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஹாப்பி ஹோம் அறக்கட்டளையில் இருக்கும் முதியோர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உணவு சமைக்க மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை செல்வி வளர்மதி வழங்கினார். இவர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியைராக பணிபுரிகிறார். நன்கொடை வழங்கிய வளர்மதி அவர்களுக்கும் மற்றும் இதனை ஏற்பாடு செய்த பாலா டிரஸ்ட்டுக்கும், ஹாப்பி ஹோம் மேனேஜ்மென்ட் டிரஸ்டி …

Read More »

மிரட்டலுக்கு பயந்த தாய்… களமிறங்கிய ரசிகர்கள் – சித்தார்த் நெகிழ்ச்சி

தனக்கு வந்த 500 மிரட்டல் கால்களை கண்டு தனது தாய் பயந்துவிட்டதாகவும், ரசிகர்கள் ஆதரவாக களமிறங்கியதாகவும் நடிகர் சித்தார்த் கூறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் …

Read More »

தமிழன் வடிவேலுவின் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

தமிழன் வடிவேலுவின் உழைப்பாளர் தின வாழ்த்துகள். உலகத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் (கல் உடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை) ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்குப் பறைசாற்றும் தினமான இந்த “மே தின” நன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்காவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தங்கள் உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைத்திடும் உலகெங்கிலும் வாழும் உழைப்பாளிகளான …

Read More »

அரவக்குறிச்சியில் ஓர் ஆசான்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெங்கடாபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சாகுல் அமீது அவர்கள் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி வகித்து வருகிறார். அவர் தனது துணை ஆசிரியர்கள் உடன் வீடுவீடாகச் தேடிச் சென்று மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற கொடிய கொரோனா காலத்தில் கூட அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தலைமைஆசிரியர் எடுத்த …

Read More »

தொலைந்த பெண்மணி கிடைத்தார் அரவக்குறிச்சியில்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள சேவியர் தெருவைச் சார்ந்த 50 வயது மிக்க பெண்மணி குழந்தை தெரசு என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று நேற்று இளைஞர் குரலில் செய்தி வெளியிட்டு இரந்தோம். இதன் மூலமாக இன்று அந்தப் பெண்மணி கிடைத்து விட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கண்டுபிடிக்க உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி இன்று அவரது மகன் திரு சந்தோஷ் அவர்கள் தெரிவித்துக் …

Read More »

அரவக்குறிச்சியில் 50 வயது மிக்க பெண்மணியை காணவில்லை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ளசேவியர் தெருவைச் சார்ந்த 50 வயது மிக்க பெண்மணி குழந்தை தெரசு என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. கீழ்க்கண்ட புகைப்படத்தில் உள்ள நபரை யாரேனும் கண்டால் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று அவரது மகன் திரு சந்தோஷ் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்.

Read More »

இளைஞர்களுடன் மய்யம் கொண்டுள்ளது வருகிற சட்டமன்ற தேர்தல் 2021….

மக்கள் நீதி மய்யத்துடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 சந்திக்க இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாகவும், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாகவும் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தக் கூட்டணி, இக்கட்டான காலகட்டத்தில் மூன்றாம் அணியாக மக்களின் மனதில் பார்க்க படுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More »

நேற்று திண்டுக்கல்லில் மாற்றுக் கட்சியினர் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இணைந்தனர்…

நேற்று திண்டுக்கல்லில் மாற்றுக் கட்சியினர் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இணைந்தனர்… நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்று கட்சியினர் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் மாவட்ட தலைவர் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டதுடன்மாநில துணைச் செயலாளர் திரு முகமது அலி மற்றும் மாநில பத்திரிக்கைத்துறை தொடர்பாளர் திரு பாலமுருகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு ரஞ்சித் குமார் அவர்கள் மேலும் இதுபோன்ற சந்திப்புகள் தொடரும் தொடரும் எனவும் …

Read More »

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 9 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. இந்தியாவில் கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.55 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில்  கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர்,  இறப்பு விகித நிலவரம்  குறித்து மத்திய …

Read More »

கரூரில் அமைந்துள்ள எஸ்பிஐ காலனி அருகே சக்தி நகரின் தெருமுனை மூடப்பட்டிருக்கும் நிலை – கரூர் நகராட்சி நிர்வாகம் தலையிடுமா?

கரூரில் எஸ்பிஐ காலனி அருகே சக்தி நகரில் ராஜ வாய்க்கால் அருகே சக்தி நகரின் தெருமுனை மூடப்பட்டு பொதுமக்களுக்கு நடக்கமுடியாமல் குப்பை மேடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. மேலும் குப்பைகள் சேர்ந்து ராஜா வாய்க்காலில் கலந்து சாக்கடை அடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு வியாதிகள் ஏற்படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான கொடிய கொரோனா போன்ற நோய்கள் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இதுபோன்ற சாக்கடைக்குள் வசிக்கும் நிலை சக்தி …

Read More »
NKBB TECHNOLOGIES