Tuesday , July 1 2025
Breaking News
Home / செய்திகள் (page 4)

செய்திகள்

All News

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரியும், அனைத்து முக்குலத்தோர் நலக் கூட்டமைப்பு தலைவருமான எம்.சம்பத் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை,முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரியும், அனைத்து முக்குலத்தோர் நலக் கூட்டமைப்பு தலைவருமான எம்.சம்பத் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

திருப்பரங்குன்றத்தில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கும் திட்டம்..

மதுரை திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணியை இன்று முதல் ஆறு நாட்களுக்கு வீடு வீடாக சென்று 50 க்கும் மேற்பட்ட குழுவினர் களப்பணியில் ஈடுபட உள்ளனர்.

மருத்துவ சேவை செய்து வரும் இந்த குழுவினருக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனத் தலைவர் ஸ்டார் குரு அவர்கள் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதற்கான தொடக்க விழா திருப்பரங்குன்றத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் டாக்டர் ஏ.பூபேஷ்குமார் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் ஹார்விப்பட்டி குமார் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம்..!

NSS சிறப்பு முகாம் நிறைவு விழா
பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் என் எஸ் எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம் மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 30/09/2024 முதல் 06/10/2024 முடிய நடைபெற்றது.


பள்ளி வளாக தூய்மை, மருவத்தூர் முனியப்பா கோவில், அய்யனார் கோவில் உழவாரப்பணி 50 மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடுதல் , போதைப்பொருள் விழிப்புணர்வு
பேரணி , முழு சுகாதாரம் கழிப்பறை பயன்படுத்துதல் விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம் பிளாஸ்டிக் ஒழிப்பு மஞ்சப் பையின் பயன்பாடு ,மழைநீர் சேகரிப்பு பேரணி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ,உயர்க் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளையும் மிகவும் சிறப்பாக நடத்திய முதுகலை ஆசிரியர் மற்றும் NSS திட்ட அலுவலர் ப.பஞ்சாபகேசன் அவர்களை NSS மாவட்ட தொடர்பு அலுவலர் K.செல்ல பாண்டியன் ,மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சத்யா முருகன், தொழிற்கல்வி ஆசிரியர் பு.செங்குட்டுவன் ,முதுகலை ஆசிரியர் க. ஜெயராமன் வாழ்த்து தெரிவித்தனர்.என்எஸ்எஸ் திட்ட உதவி அலுவலர் ப.வேல்முருகன் நன்றி தெரிவித்தார் .

தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!

சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவரது மூத்த மகனான அலோசியஸ் என்பவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியம் என்ஜினியரிங் துறையில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பமாக இருந்தாலும் தன் மகனை படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தந்தை இரவு பகலாக வேலை செய்து இவரது படிப்பிற்கான செலவுகளை கவனித்து வந்தார்.

திடீரென ஜோர்ஜ் டோமினிக் மாரடைப்பால் மரணமடைந்த காரணத்தினால், அவருடைய மூத்த மகனான அலோசியஸ் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.

இதை அறிந்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் அவர்கள், சிங்கப்பூரில் செயற்பட்டு வரும் தொண்டு நிறுவனமான குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர் முனைவர் மணிவண்ணன் நாச்சியப்பன் அவர்களிடம் இந்த மாணவனின் நிலையைப் பற்றித் தகவல் தெரிவித்தார்.

மாணவனின் குடும்ப நிலையைக் கேட்டறிந்த முனைவர் மணிவண்ணன் நாச்சியப்பன் மாணவனின் கல்விக் கட்டணம் முழுவதையும் பொறுப்பேற்று ஒரு இலட்சம் ரூபாயை நன்கொடையாக அனுப்பி வைத்தார்.

இப்பணத் தொகையினை கடந்த ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து முனைவர் நீலமேகம் நிமலன் அவர்கள் அந்த மாணவனின் தாயார் செல்வியிடம் வழங்கினார். நிதியுதவியை பெற்றுக் கொண்ட அவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், நிகழ்வில் பங்கு கொண்ட 600 ற்கும் மேற்பட்டவர்களிடம் பேசிய முனைவர் நீலமேகம் நிமலன் மாரடைப்பு வராமல் தடுப்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இளைஞர் குரல் செய்தியாளர் மதுரை கனகராஜ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

Image

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு K V தங்கபாலு Ex MP, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ்குமார் MLA, தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் திரு ரூபி மனோகரன் MLA ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு கணேஷ் MLA, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ராபர்ட் புருஸ் MP அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள், கேரள மாநில மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கு.செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிக்கை…

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பரப்புரையில் நரேந்திர மோடி நிறைய வாக்குறுதிகளை கொடுத்து 2019 வரை அதை நிறைவேற்றாமல், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி 2024 மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையில்லாத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மை, பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சின் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டன. விவசாயிகளுக்கு எதிராக அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க 2021 இல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது, சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டுமென்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். அதை நிறைவேற்றி பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கி, சமூகநீதி பெறுகிற வாய்ப்பை அளிக்க பிரதமர் மோடி தயாராக இல்லை.

பிரதமர் மோடி ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்கு பதிலாக பிரதமர் மோடி அலுவலகத்தில் அதிகார குவியல் ஏற்பட்டு ஜனநாயக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரி போல பிரதமர் மோடி செயல்பட்டதற்கு கடிவாளம் போடுகிற வகையில் மக்களவை எண்ணிக்கையில் 60 சதவிகிதம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், 40 சதவிகிதம் இந்தியா கூட்டணிக்கும் மக்கள் வாக்களித்து ஜனநாயகத்தை செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணியின் சார்பாக எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்தியின் ஆணித்தரமான வாதங்களை எதிர்கொள்ள பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களால் முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தாமஸ் பிக்கெட்டி அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்படி, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததை காட்டிலும் சமமின்மை அதிகம் உடையதாக பிரதமர் மோடி ஆட்சி செயல்படுகிறது. இந்தியாவில் உயர்நிலையில் உள்ள 1 சதவிகித நபர்கள் 70 சதவிகித சொத்துகளை குவித்து வருவதாக ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதேநேரத்தில் ஏழை, எளிய மக்களுக்காக அன்னை சோனியா காந்தி கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் 5 கிலோ உணவு தானியம் 80 கோடி மக்களுக்கு 2008 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நாடாக மாற்றி மூன்றாவது நிலைக்கு கொண்டு வருவேன் என்று கூறிவருபவர் நரேந்திர மோடி. ஆனால், அவரது ஆட்சியில் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு 80 கோடி மக்களுக்கும் இலவச உணவு தானியம் வழங்குகிற நிலையில் தான் அவரது ஆட்சி நடைபெற்று வருகிறது. உலக பசி குறியீட்டில் இந்தியா 125 நாடுகளில் 111-வது இடத்தில் இருக்கிறது. 20 கோடி மக்களை வறுமையிலிருந்து விரட்டியதாக கூறிய மோடி ஆட்சியில் வறுமை ஒழிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

பிரதமர் மோடி ஆட்சியில் தொடர்ந்து கோடீஸ்வரர்கள் மேலும் கோடீஸ்வரர்களாக ஆவதற்கு நாட்டின் வளங்களை சூறையாடி சொத்துகளை குவித்து வருகிறார்கள். கடந்த ஜூலை 2024 ஹ{ரூன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் நம்பர் 1 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டில் நான்காவது இடத்தில் இருந்த கௌதம் அதானி, தற்போது நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டை விட அதானியின் சொத்து மதிப்பு 95 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு ரூபாய் 10 லட்சம் கோடிக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே கோடீஸ்வரர்களை உருவாக்கும் நாடாக இந்தியா மாறி வருகிறது. சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் சரிந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் 29 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளிலும் ஒரு கோடீஸ்வரரை மோடி ஆட்சி உருவாக்கி சாதனை படைத்துள்ளது. 2023 இல் 259 கோடீஸ்வரர்கள் இருந்தனர். அது நடப்பாண்டில் 334 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 159 லட்சம் கோடியாக உயர்ந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 50 சதவிகிதமாக உயர்ந்திருப்பதன் மூலம் மோடி ஆட்சி யாருக்காக நடக்கிறது ? அதானி, அம்பானி உள்ளிட்ட கோடீஸ்வரர்களை மேலும் கோடீஸ்வரர்களாக ஆக்கி அதன்மூலம் தேர்தல் பத்திர நன்கொடையை குவித்து தேர்தல் களத்தில் சமமின்மையை உருவாக்கி, அதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற்றவர் தான் பிரதமர் மோடி. மோடி ஆட்சி நடப்பது கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியே தவிர, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை என்பதையே கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம் உறுதிப்படுத்துகிறது.

எனவே, மோடி ஆட்சி என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத ஆட்சி என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டு உரிய பாடத்தை உரிய நேரத்தில் நிச்சயம் வழங்குவார்கள்.

விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை…

Image

மாண்புமிகு திரு : உதயநிதிஸ்டாலின் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தப்பட வேண்டும்; தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் திறம்பட வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். அவ்வகையில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி தமிழ்நாட்டிற்கு மேலும் புகழ் சேர்த்திட எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் திரு.கு.செல்வப்பெருந்தகை MLA தலைவர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

ராணிபேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தலைவர் திரு.சி.பஞ்சாட்சரம் அவர்கள் தலைமையில் CSP மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு செல்வப் பெருந்தகை MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Image
Image

இந்நிகழ்வில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு AM. முனிரத்தினம் MLA, துணைத் தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் ராணிபேட்டை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலம் தமிழகம்..அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை…

தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலம் தமிழகம்..அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது எனவும், இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் அதிகளவில் நகரமயமாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,”சான்பிரான்ஸிஸ்கோவின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். உலகின் மிகப்பெரிய மதிப்புமிக்க பெருமை அமெரிக்காவிற்கு உண்டு என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற உண்மை. அப்படிப்பட்ட அமெரிக்காவிற்கு நான் வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்.

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் நான். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற 75 ஆண்டுகள் பழமையான அரசியல் இயக்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன். இப்போது தமிழ்நாட்டை ஆறாவது முறையாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்திய நாட்டில் பலமுறை எங்கள் கூட்டணி பிரதமர்களை உருவாக்கி ஆட்சியில் இருந்திருக்கிறது.

எனது தந்தையைப் பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். இந்திய நாட்டில் பல பிரதமர்களை உருவாக்கியிருக்கிறார். அப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரர் அவர். 1971-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது, கலைஞர் அமெரிக்காவிற்கு வருகை தந்தார். இப்பொழுது நான் வருகை தந்திருக்கிறேன்.

புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் பல இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. சென்னை பற்றி நீங்கள் அனைவரும் நன்றாக அறிந்திருப்பீர்கள். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. 48 விழுக்காடு நகரமயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் அதிகளவில் நகரமயமாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு தான்.

நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி மையங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மனிதவளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.

இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரியைவிட இருமடங்கு அதிகமாக உயர்கல்வியில் மாணவர்கள் சேரும் விகிதத்தை 48 சதவிகிதம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் சுமார் 45 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ஆசியாவில் சுகாதார சுற்றுலாவில் முன்னணி மாநிலமாகமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய வளர்ச்சி மிகுந்த மாநிலமான தமிழ்நாட்டிற்கு தொழில் துவங்க வருமாறு உங்களை எல்லாம் அழைப்பதற்காகதான் நான் இங்கே வருகை தந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டிற்கும், அமெரிக்காவிற்கும் தொழில் ரீதியான உறவு எப்போதுமே பலமாக இருந்து வந்துள்ளது. 300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டத்தினை நிறுவியுள்ளனர். சேவைகள் மற்றும் சேவை மையங்கள், உலகளாவிய திறன் மையங்கள், உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் மேற்கொண்டிருக்கிறார்கள். இதை தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான ஒரு அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன்.

காக்னிசன்ட், ஃபோர்டு, கேட்டர்பில்லர், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், சான்மினா, விஸ்டியான், எச்.பி, அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஜெனரல் எலெக்ட்ரிக், யுபிஎஸ், ஃபைசர், ஹனிவெல், பேபால், குவால்காம் போன்ற பெரும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளன. இந்த வரிசையில் இன்னும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும். ஏற்கனவே, தொழில் துவங்கியுள்ள நிறுவனங்களும், தங்கள் தொழிலை இன்னும் விரிவுபடுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்களது ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு விதத்தில் சிறந்தது. எனவே உங்கள் ஒவ்வொருவரையும் மிக முக்கியமாக நான் கருதுகிறேன். சான்பிரான்ஸிஸ்கோ பே (Bay) மற்றும் கலிஃபோர்னியாவிலிருந்து எங்களது அழைப்பை ஏற்று மதித்து இங்கு திரளாக குழுமியிருக்கக்கூடிய முதலீட்டாளர்களை நான் அன்புடன் வரவேற்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

சான்பிரான்ஸிஸ்கோ பே பகுதி குறிப்பாக சிலிக்கான் வேலி தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு பெயர் பெற்ற பகுதி என்பது உலகம் அறிந்த உண்மை. தமிழ்நாட்டின் முன்னேற்ற பயணத்தில் பதிலளிக்கக்கூடிய துறைகளை பற்றி விவாதிக்க அமெரிக்காவில் உள்ள பெருந்திட்டங்களின் தலைவர்களை ஒரு பொதுமேடையில் கொண்டு வருவதே இந்த மாநாட்டினுடைய முக்கிய குறிக்கோள்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைபடுத்துவதற்கான வழிகளை கண்டறியும் பயனுள்ள விவாதங்களுக்கு இந்த மாநாடு பெரும் உதவிகரமாக அமையும். ஆசியா நாடுகளின் நுழைவு வாயிலான சென்னையில் இருந்துதான் நான் வருகை தந்துள்ளேன். தமிழ்நாடு இன்று உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்று. 39,000-க்கும் மேலான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவிற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் என்ற அளவில், அகில இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு அதிக அளவில் உள்ளது. மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள் ஆகிய பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குகிறது. ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. சேவைகள் ஏற்றுமதியில் இரண்டாமிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சிறந்து விளங்கும் அறிவுசார் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், சமீபத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மையம் சமீபத்திலே சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் இத்துறையின் எதிர்கால வளர்ச்சி மேலும் மேம்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நவீன உள்கட்டமைப்பு, ஏராளமான வளங்கள் மற்றும் திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார்கள். மக்களின் ஆற்றலை தமிழ்நாடு நன்கு பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் மற்றும் பணிபுரியும் வயதினர் ஆகியோரின் மக்கள் தொகை சற்றே அதிகம். இது எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு தனித்துவமான நன்மையை வழங்குகிறது. எனினும் அதற்கேற்றவாறு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது எங்களுடைய இலக்கு. இதன்பொருட்டு, பல்வேறு முன் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றவேண்டும் என்பது எங்களுடைய இலட்சிய இலக்கு. இதை அடைவதற்காக மூலதனம் அதிகம் உள்ள தொழில்களையும், வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தும் தொழில்களை ஈர்ப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறான இருமுனை முயற்சி தற்போது சாதகமான பலன்களை அளித்து வருகிறது.

இவ்வாறான முன் முயற்சியின் ஒரு அங்கமாகதான் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-யை மிக வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். 35-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள், பன்னாட்டு பிரதிநிதிகள் மற்றும் புகழ்மிக்க தொழில் நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

அமெரிக்க பிரதிநிதித்துவம் இந்த மாநாட்டில் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது. அந்த மாநாடுகள் மூலமாக நாங்கள் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 631. ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதன் மூலமாக, 1.4 மில்லியன் நபர்களுக்கு நேரடியாகவும், 1.2 மில்லியன் நபர்களுக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

இந்த பிரம்மாண்டமான நிகழ்வின் மூலம், உலக முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டின் மேல் உள்ள நம்பிக்கையை உலகத்திற்கு நாங்கள் எடுத்துக்காட்டினோம். மொத்தமாக சொல்லவேண்டுமென்றால், கடந்த 3 ஆண்டுகளில் 3.1 மில்லியன் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் கிட்டத்தட்ட 120.48 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை ஈர்த்து இருக்கிறோம்.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே வேலைவாய்ப்புக்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமமான அளவில், உறுதியாக சமூக பொருளாதார வளர்ச்சிப் பெற்று வருகிறது. இவ்வாறு ஈர்க்கப்பட்ட முதலீடுகளில், அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளும் பெருமளவில் உள்ளது என்பதையும் நான் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகள் சமீபகாலங்களில் மிகப்பெரும் எழுச்சி கண்டுள்ளது. இந்திய சந்தைக்குள் நுழையும் அமெரிக்க நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் எண்ணற்ற அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை நிறுவியுள்ளார்கள். இன்னும் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான பல்வேறு தொழில் கொள்கைகளையும், சிறப்பு ஊக்குவிப்புத் திட்டங்களையும் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம்.

மின்னணுவியல் கொள்கை, நிதிநுட்ப கொள்கை, ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவைப்படும் அனுமதிகளை விரைவாகவும், எளிதாகவும் பெற்றிடும் வகையில், ஒற்றைச்சாளர இணையத்தளத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். இதன்மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.

வணிகம் புரிதலை எளிதாக்குவதற்காக நாங்கள் மேற்கொண்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாக, வணிகம் புரிதலை எளிதாக்கும் தரவரிசையில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலம் என்று தமிழ்நாடு வரையறுக்கப்பட்டுள்ளது.

மின்னணுவியல் (செமிகண்டக்டர்கள்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறைகலன்கள், மேம்பட்ட உற்பத்தி போன்ற துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். ஒருவொருக்கொருவர் பரிமாறும் நட்பின் அடிப்படையிலான நல்லுறவின் மூலமாகதான் நாம் வளரமுடியும். இந்தியாவில் உள்ள அந்த நல்லுறவை குறிப்பாக தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

உயர்ந்த மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு அமெரிக்கா. அந்த அடிப்படையோடு, தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு நீங்கள் பங்களிக்க முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடும் உங்களை வரவேற்க காத்திருக்கிறது” என பேசினார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES