
மதுரையில் தமுமுக சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

மதுரையில் தமுமுக சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மதுரை,செப்.10-
மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சுற்றுச்சூழல் அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் நைனார் முஹம்மது தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முகமது பிலால் இறைவசனம் ஓதினார்.மாநில பொருளாளர் காஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமுமுக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் முகமது கௌஸ், தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான், மமக மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன், மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது,தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம், வடக்கு மாவட்ட தலைவர் சீனி அகமது ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தலைமை பிரதிநிதி ஹாரூன் ரசீது சுற்றுச்சூழல் அணியின் அவசியத்தை பற்றி எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் தெற்கு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் நன்றியுரை கூறினார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி

மதுரையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி
மதுரை ஆரப்பாளையம் பகுதியில்
உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தான
விழிப்புணர்வு பேரணியானது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை வரை நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமை விருந்தினராக டாக்டர். பத்திரிநாராயணன் தலைமை மருத்துவ அதிகாரி அவர்கள்
பங்குபெற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அண்ணா காலேஜ் நிறுவனர் அண்ணாத்துரை, மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன், கிளை மேலாளர் இராஜபாண்டியன், டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அண்ணா ஆப்டோ மெட்ரிக் கல்லுரி மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
வாடிப்பட்டியில் இருந்து பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்த வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள்.!

வாடிப்பட்டியில் இருந்து பால்குடம் எடுத்து வந்த வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள்
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சி.புதுார் கிராமத்திலிருந்து வந்த நிர்வாகிகள் அழகரடி மெஜூரா கோட்ஸ் அருகே உள்ள முத்துப்பிள்ளை சிலையிலிருந்து சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலை வரை, மாநில மகளிரணி தலைவியும், தென்மண்டல அமைப்பாளருமான அன்னலட்சுமி சகிலா கணேசன் அவர்களின் ஆலோசனைப்படி, ஊர்வலமாக பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துச் சென்றனர்.
இதில் மதுரை மாவட்ட துனணத்தலைவர்
வைரமுத்து (எ) விஜயன் உள்பட
நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரையில் வாஸன் கண் மருத்துவமனையின் கான்டூரா லேசிக் சிகிச்சை பிரிவை மேயர் இந்திராணி தொடங்கி வைத்தார்.

மதுரையில் வாஸன் கண் மருத்துவமனையின் கான்டூரா லேசிக் சிகிச்சை பிரிவை மேயர் இந்திராணி பொன்.வசந்த் தொடங்கி வைத்தார்
மதுரை,செப்.09-
மதுரை அண்ணாநகர் வாஸன் கண் மருத்துவமனையில் பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் அதிநவீனமான கான்டூரா லேசர் சிகிச்சை பிரிவை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த் தொடங்கி வைத்தார்,
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாஸன் கண் மருத்துவமனையின் முதன்மை தலைமை மருத்துவர் கமல்பாபு கூறுகையில் “கான்டூரா லேசிக் சிகிச்சை பிரிவு சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக தென் தமிழகத்தில் முதன் முதலாக மதுரையில் கொண்டு வரப்பட்டு உள்ளது,
மிக துல்லியமாக கண் சிகிச்சை அளிக்க கான்டூரா லேசர் மிஷின் உதவிகரமாக இருக்கும், இந்த இயந்திரத்தை கொண்டு 2 கண்களிலும் 7 நிமிடங்கள் அறுவை சிகிச்சை மேற்க் கொள்ளலாம், இந்த அறுவை சிகிச்சை மேற்க் கொள்ளும் நோயாளிகள் 1 மணி நேரத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்,
மேலும் கண்களை தொடாமலேயே அறுவை சிகிச்சை செய்வது தான் இயந்திரத்தின் சிறப்பாகும்” என கூறினார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
சனாதனத்தால் பாதிக்கப்படாதவர் யாரும் இல்லை என்றும் இன்று நம்முடைய வாழ்க்கையின் பெரும்பாலான மக்களின் துன்பங்களுக்கு பின்னால் இருப்பதும்
சனாதனம் என்கிறார் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள்!
சனாதனம் என்றால் என்ன?
இந்து மத புத்தகங்கள் சுமார் 6000+ புத்தகங்களை கடந்த 30 வருடங்களாக ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள் இன்று நம்மிடையே சனாதனம் என்றால் என்ன என்பதையும் இன்று நமது வாழ்வில் அதன் தாக்கத்தையும் தெளிவாக விளக்க இருக்கிறார். இந்த Zoom சந்திப்பில் சனாதனம் பற்றிய இந்து மதம் பற்றிய, மதங்கள் பற்றிய உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இன்று செப்டம்பர் 9 சனிக்கிழமை மதியம் 3.30 மணி முதல் 6.30 மணி வரை ஆய்வாளர் உங்கள் கேள்விகளுக்கு விடைகள் அளிப்பார்கள்.
https://us06web.zoom.us/j/89616106713?pwd=VTdGNTlzM1M4bnQzTXY1M25ub2pLQT0…
மதுரையில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் கைது.!

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில பாரத இந்து மகா சபா அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சனாதனம் குறித்து தவறாக பேசியதாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் சார்பாக அதன் தேசிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா முன்னிலையிலும், மதுரை டி.எம் கோர்ட் சந்திப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் தனது வீட்டில் உள்ள சனாதன தர்மத்தை முதலில் ஒழிக்க வேண்டும். திமுகவில் உள்ள அனைத்து இந்துக்களையும் கட்சியை விட்டு வெளியேற்றி விட்டு சனாதனத்தை குறித்து பேசலாம்.உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும். என்று தேசிய தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் செல்லத்துரை, சுபாஷ்,ராமநிரஞ்சன், பூசாரி தெய்வேந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசிய தலைவர் உட்பட 100 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரையில் பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர்.!

மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர்
மதுரை,செப்.07-
ராகுல் காந்தி எம்.பி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலையில் இருந்து ஜான்சிராணி பூங்கா பகுதியில் உள்ள இந்திரா காந்தி சிலை வரை, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கார்த்திகேயன் தலைமையில் பேரணி நடைபெற்றது.
இதில் கவுன்சிலர்கள் தல்லாகுளம் முருகன், ஜெய்ஹிந்த்புரம் முருகன் மற்றும் நிர்வாகிகள் சிதம்பரபாரதி, பாலு, சிலுவை, செய்யதுபாபு, ரவிச்சந்திரன், அப்துல்மாலிக், நாஞ்சில் பால் ஜோசப், மீர்பாட்ஷா, ராஜா பிரபாகரன், ஜாகிர்உசேன், பாண்டி. சுப்பையா. டாக்டர் ரவிச்சந்திரன், , மலர்பாண்டியன், வன்னி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500 வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சி

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500 வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது
மதுரை,செப்.07
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500-வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியை பிரனேஷ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் கிஷோர்குமார், ஆரபி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி, செயலாளர் சித்ரா, துணைச் செயலாளர் ரகுபதி, பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்
