Friday , December 19 2025
Breaking News
Home / செய்திகள் (page 2)

செய்திகள்

All News

மதுரை மக்கள் முன்னிலையில் மதுரை 16 படத்தின் ப்ரமோஷன் விழா கோலாகலம்..

மதுரை 16 திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா மதுரை விஷால் தி மாலில் சிறப்பாக மதுரை மக்கள் முன்னிலையில் ஆடல் பாடலுடன் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்துனர்களாக டாக்டர் சரவணன் மற்றும் வாட்டர்மெலோன் ஸ்டார் டாக்டர் திவாகர் மற்றும் டைகர் சக்ரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை 16 திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதேவி சின்னயாஜீன் வில்லியம்ஸ், இயக்குனர் ஜான் தாமஸ், கதாநாயகன் ஜெரோம் விஜய், கதாநாயகி நிவேதா தினேஷ் மற்றும் பட குழுவினர்கள் பலர் பங்குபெற்றர்.

மேலும் இந்த நிகழ்ச்சியை மதுரை அடங்கா அஜித் குரூப்ஸ் தல சபி தொகுத்து வழங்கினார். மேலும் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் மதுரை 16 திரைப்பட கலைஞர்களை வாழ்த்தினர் முற்றிலும் புது முகங்கள் நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் கிரைம் திரில்லர் படமாக இந்த திரைப்படம் 200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் செப்டம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்.

மதுரை அனைத்து மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்…!

மதுரை அனைத்து மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

மதுரை ஜூலை 28

மதுரை அனைத்து மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பாக சங்கப் பொதுக்குழு கூட்டம் மதுரை அருள்தாஸ்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சங்க உறுப்பினர்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைகளை குட்செட் தெரு எம் எம் எம் கண் மருத்துவமனை மற்றும் என் டி சி சிறப்பு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் சங்கத் தலைவர் மாரி, இணைச்செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் ரெங்கராஜ், சட்ட ஆலோசகர் முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள்.

நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் கேட்டோம். ஆனால் எங்களுக்குத் தரவே இல்லை. அதற்காக அரசு விதியையே மாற்றி, வீடியோக்களைக் கொடுக்காமல் பார்த்துக்கொண்டது. மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன், 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள்.

கர்நாடகாவிலும் நாங்கள் ஆழமான ஆய்வு செய்தோம் — மிகப்பெரிய மோசடி அங்கே வெளிச்சத்திற்கு வந்தது. நான் உங்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் காட்டத் தயார் — என்ன வஞ்சனை நடந்தது என்பதையும், எங்கே நடந்தது என்பதையும் முழுமையாக, ஆதாரங்களுடன் காட்ட முடியும்.

பாஜகவின் நாடகத்தை நாங்கள் புரிந்துகொண்டுவிட்டோம்.

கர்நாடகாவில் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து, 6 மாதமாக முழுமையாக ஆய்வு செய்தோம் — அதிலேயே இவர்கள் எப்படி தேர்தலை திருடுகிறார்கள் என்ற முழு விபரங்களையும் பிடித்தோம்.

புதிய வாக்காளர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்?

யார் உண்மையில் வாக்கு செலுத்துகிறார்கள்?

எங்கிருந்து அந்த வாக்குகள் போட்டுக்கப்படுகின்றன?

இப்போது அவர்களுடைய முழு திருட்டுத்தனமும் எங்களுக்குத் தெரிந்துவிட்டது —
அவர் அதையும் உணர்ந்துவிட்டார்கள். அதனால்தான் இப்போது பீகாரில் அந்த முறையையே மாற்றி— ஆனால் ஒரு புதிய வடிவில் — பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

தற்போது அவர்கள் வாக்காளர்களையே நீக்கிவிட்டு, தங்களுக்கேற்ற முறையில் புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கப்போகிறார்கள். இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன. இதுதான் நம் ஜனநாயகத்தின் கடுமையான உண்மை.

— எதிர்க்கட்சித் தலைவர் திரு Rahul Gandhi

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்று கார்த்திக் ப. சிதம்பரம், .M.P. கேட்டுக்கொண்டுள்ளார். இதனை ஆராய்ச்சி துறை முழுமையாக முன்மொழிகிறது.

– DR.R. மாணிக்கவாசகம் MSC., AOM., PhD, மாநில தலைவர் – ஆராயச்சி துறை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 350 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை விருந்து – அவிநாசி நகர காங்கிரஸ் கமிட்டி

அவிநாசி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாட்டிலும் அவிநாசி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் கார்த்திகேயன் அவர்கள் ஏற்பாட்டிலும் அவிநாசி அரசு மேல்நிலை பெண்கள் பள்ளியில், இன்று காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 350 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை விருந்து என்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மாணிக்கம், தற்போதைய நகராட்சி உறுப்பினர் கருணாபால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊட பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாய் கண்ணன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

அரவக்குறிச்சி ரோட்டரி பணியேற்பு விழா 2025 -26

கனவு மெய்ப்பட வேண்டும் | ROTARY CLUB OF ARAVAKKURICHI – Club No: 2257354 II Charter Dt: 13.11.2023 || RI Dist.3000

ரோட்டரி பணியேற்பு விழா 2025 -26 அன்புடன் அழைக்கிறோம்…

அரவக்குறிச்சி ரோட்டரி சங்கத்தின் 2025 -26 ஆண்டின்,
தலைவராக Rtn.VRK இரவீந்திரன் VRK SPORTS,
Rtn. செயலாளராக Rtn.A.சதீஷ் செந்தூர் அசோசியேட்ஸ்,
பொருளாளராக Rtn.ஆனந்த குமார் அண்ணாதுரை Blueesky Computers.

முதன்மை விருந்தினர்: Rtn. PDG.P. கோபாலகிருஷ்ணன், மாவட்ட கற்றல் முதன்மையாளர் 2025 -26.

சிறப்பு விருந்தினர்: Rtn. R.ராஜா கோவிந்தசாமி, முன்னாள் ஆளுநர்.

விழா முன்னிலை: Rtn.S.வெங்கடேசன், மண்டல ஒருங்கிணைப்பாளர் 2025-26,
Rtn.R.அருண்குமார், துணை ஆளுநர் 2025-26.

Date & Time: 13 ஜூலை 2025, ஞாயிற்றுக்கிழமை, 10.30 AM – 1.30 PM
Place: ஸ்ரீ விஜயலட்சுமி இன்டர்நேஷனல் பள்ளி, ரெங்கராஜ் நகர், பள்ளபட்டி

முன்னாள் தலைவர்: வி செந்தில்
அவைக்காப்பாளர்: பாரி P.
துணைத் தலைவர்: வினோத் ஜெயராமன்.

சங்க நிர்வாகம்: பிச்சமுத்து எம், V. துரைசாமி

உறுப்பினர் சேர்க்கை: மணிகண்டன் கே, கோபி கிருஷ்ணா R

இளைஞர் சேவை: விஜயன் ஆர், சத்ரியன் ஆர்.

மானியம் & நிதி நிர்வாகம்: செந்தில் விஷ்ணு ராம்.

ஆளுநர் மாவட்ட & சிறப்பு திட்டங்கள் : ஜெயக்குமார் S, Er. அருண்குமார்.

சங்கத்தின் திட்டங்கள்: பாலமுருகன் S, G காதர் சுல்தான், R.கண்ணன்.

மருத்துவ திட்டங்கள்: Dr. பிரபாகரன், பாலகுமார் B, ரகுராம் M
சமூக மதிப்பு : கார்த்திகை லட்சுமி S
சமூக ஊடகங்கள் : பாலமுருகன் K

புதிய உறுப்பினர்கள் :
டி அருண்குமார்
பி பெரியசாமி
குமரேசன்
R காமாட்சி
S.ராஜராஜன்.


Rtn.V.செந்தில், தலைவர் 2024 – 2025
Rtn.வினோத் ஜெயராமன், செயலாளர் 2024 – 2025

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

பிடியதன் உருமை கொளமிகு கரியது வடிகொடு தனது அடி வழிபடும் சுபர் இடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில் வலிவலம் முறை இறையே -விநாயகர் காப்பு

இறையன்புடையீர்,
எல்லாம் வல்ல உமையொரு பாகன் திருவருளால் அமைந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு கள்ளியழ சித்தர் குருபூஜை விழா நிகழும் மங்களகரமான விசுவாவசு ஆண்டு வைகாசி மாதம் 27 – ஆம் நாள் (10.06.2025) செவ்வாய்கிழமை பௌர்ணமி திதியில் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகர் வழிபாடு, கள்ளிபழ சித்தர் குருபூஜை விழா வெகுவிமர்சையாக நடையெறுவதால் ஆன்மீக சான்றோர்கள், பக்தகோடிகள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு குருபூஜை விழாவை சிறப்பான முறையில் நடத்தி கொடுத்து சித்தரின் அருளையும், அருட்பிரசாதத்தையும் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்
ஊர் பொதுமக்கள், ஆத்துமேடு – அரவக்குறிச்சி.

குறிப்பு : 10.06.2025 செவ்வாய்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் சித்தர் குருபூஜை அன்னதானம் நடைபெறும். அன்னதானத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, பால், தயிர், காய்வகைகள் கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். சென்ற ஆண்டு அன்னதானத்திற்கு நிதியுதவி, பொருளுதவி வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசயோகிக் கருவூறார் சித்தர்,
+91 9487984146.

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமத்திற்குட்பட்ட பாப்பனம்பட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் குளம் தூர் வாரும் திருவிழா…

வரவனை கிரமத்திற்குட்பட்ட 21 குளங்களையும் தூர் வார முடிவெடுத்து எயிட் இந்தியா மற்றும் கைஃபா அமைப்பின் உதவியுடன் பசுமைக்குடி தூர் வாரி வருகிறது. இதுவரை பாப்பனம்பட்டி அருகில் மத்தியமடைகுளம் , கோட்டப்புளிபட்டி மணியாரண்மடை குளம், தலையாரியூர் தலையாரிகுளம், சுண்டுக்குழிப்பட்டி குளம், பாப்பனம்பட்டி வெள்ளாட்டுக்காரன் குளம் ஆகிய குளங்கள் தூர் வாரும் பணி முடிவடைந்து 6 வது குளமாக பாப்பான்குளம் என்னும் குளம் தூர்வாரும் பணி ஆரம்பித்தது.

YouTube player

குளம் தூர் வாருவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் குளம் எப்படி பராமரிப்பது, விவசாயத்தை மீட்டெடுப்பது என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மட்டன் பிரியாணியுடன் நடந்த அசைவ விருந்தில் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

வரவனை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஜே சி பி டிரைவர் ஆதி மூலம் ஆகியோருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இத்திருவிழாவை முன் நின்று நடத்திய பாப்பனம்பட்டி திரு. பழனிவேல், முன்னாள் கவுன்சிலர் திரு. நரசிங்கமூர்த்தி, திரு ஐயம்பெருமாள் ஆகியோர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு நன்றி.

நரேந்திரன் கந்தசாமி
பசுமைக்குடி தன்னார்வ இயக்கம்

மதுரையில் தமிழக இந்து மகா சபா அலுவலகத்தில், இந்து இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்…!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ரமணா ஸ்ரீ கார்டன் பகுதியில் உள்ள தமிழக இந்து மகா சபா அலுவலகத்தில், இந்து இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மதுரையில் 365-வது நாளாக விலை இல்லா உணவு, குடிநீர், பழவகைகள் வழங்கிய நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை

ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு விலை இல்லா உணவு, குடிநீர், பழவகைகள் வழங்கிய நட்சத்திர நண்பர்கள் அமைப்பினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது

மதுரையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. அதன் நிறுவனத்தலைவர் ஸ்டார் குருசாமி தலைமையில் தினமும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு வருடமாக ஆயிரம் பேருக்கு உணவு, குடிநீர், பழ வகைகள் வழங்கி வருகின்றனர்.

மேலும் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் 350-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை நிறுவி வைகை ஆற்றில் குப்பைகள் போடாமலும் கண்காணித்து வருகின்றனர். மேலும் வைகை ஆற்றில் படர்ந்து கிடக்கும் ஆகாயத் தாமரைகளையும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.

சாலை ஓரத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையான ராட்சத நிழற்குடையும் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு போர்வை, கம்பளி முதலியவைகளும் வழங்கி வருகின்றனர். மற்றும் அரசு பள்ளிகளுக்கு நவீன கழிவறைகளை கட்டித் தந்து வருகின்றனர்.

வசதியற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு படிப்பு உதவி தொகையும் வழங்கி வருகின்றனர். மழை,புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் வெளி மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகின்றனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை பொருட்கள் மற்றும் மருத்துவ கருவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் ஒரு வருடம் நிறைவு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் நிறுவனத் தலைவர் ஸ்டார் குருசாமி தலைமையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 5.000 பேருக்கு விலையில்லா உணவு குடிநீர், பழ வகைகள் வழங்கினார்கள்.

இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை மதுரை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் துணை ஆணையாளர் திருமலைக்குமார் தொடங்கி வைத்தார். உயர்நீதிமன்ற குற்றவியல் அரசு வழக்கறிஞர் அன்புநிதி, மதுரை மாவட்ட குற்றவியல் துறை அரசு வழக்கறிஞர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நட்சத்திர நண்பர்கள் அமைப்பின் சட்ட ஆலோசகர் வக்கீல். முத்துக்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பஞ்சவர்ணம், தொழிலதிபர் டி.கே.எஸ்.ராஜபாண்டி, ஹார்விப்பட்டி குமார், வழக்கறிஞர் முத்துக்கருப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES