பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்தினம் உட்பட 50 முக்கிய பிரமுகர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு இளைஞர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய நாட்டின் குடிமகனின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது அது பாரதப் பிரதமராக இருந்தாலும், இது சர்வாதிகார போக்கு, இது சரியா? என ஐயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் என்னும் அரசர்கள் பிரதம மந்திரியை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை மறந்து விடாதீர்கள்.
– தமிழ்நாடு இளைஞர் கட்சி

இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்