Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் நவம்பர் 24,25,26 தேதிகளில் சித்தர்கள் மகாசபை நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு.!
NKBB Technologies

மதுரையில் நவம்பர் 24,25,26 தேதிகளில் சித்தர்கள் மகாசபை நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு.!

சித்தர்கள் மகாசபை (மதுரை) நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நவம்பர் 24,25,26 ஆகிய மூன்று தேதிகளில் நடக்க இருக்கின்றது.

மாநாட்டுக்காக இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து சித்தர்கள், சங்கராச்சாரிகள், ஆதீனங்கள், சிவனடியார்கள், கவர்னர்கள்,மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், மருத்துவம் மற்றும் உணவு வகையில் பற்றிய கருத்தரங்கள்,150 மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது.


மேலும் உலக சித்தர்கள் கூட்டமைப்பின் தலைவராக-சிவயோகி அனுகூலநாதர் ராஜசேகர சுவாமிகள், துணைத் தலைவராக திருமுருகன்,செயலாளராக-
க.செல்வவேல்பாண்டி, துணைச் செயலாளராக டாக்டர் கஜேந்திரன், இணைச் செயலாளராக-
செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளராக ரமணன்,இணைப் பொருளாளராக-
ஹரிஹரன், செயற்குழு உறுப்பினர்கள்
சிமியோன்,மணிகண்டன், ஆறுமுகம், கோவிந்தராஜு, மாரிமுத்து, முருகேசன் அலாவுதீன் ஆகியோர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES