Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / கேட்ட வரம் கொடுக்கும் உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதிமாணிக்கம் பெருமாள் சுவாமி

கேட்ட வரம் கொடுக்கும் உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதிமாணிக்கம் பெருமாள் சுவாமி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ஜோதிமாணிக்கம் கிராமத்தில் உள்ளது ஜோதிமாணிக்கம் பெருமாள் கோவில். இந்த கோவில் 1.000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

மேலும் மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த கோயிலில் கவரா நாயுடு பங்காளிகள் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

மாதா மாதம் ஏகாதசி மற்றும் பௌர்ணமி அன்று பங்காளிகள் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கோவிலுக்கு வந்து மனமுருகி வேண்டி சென்றால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

தேனி மாவட்டம்
T.சுப்புலாபுரம், திம்மராசநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, பொம்மிநாயக்கன் பட்டி, சேடப்பட்டி, ரெங்கசாமிப்பட்டி, மதுரை,திருப்பூர் போன்ற ஊர்களை சேர்ந்த ஜோதிமாணிக்கம் பெருமாள் சாமியை குலதெய்வமாக வழிபடும் பங்காளிகள் அனைவரும் ஒன்றிணைந்து புரட்டாசி அனைத்து சனிக்கிழமைகளிலும் சுவாமியை வழிபடுவதோடு பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

இந்த புரட்டாசி 4 ஆம் சனிக்கிழமை அன்று நடந்த திருவிழாவில் 1.000 க்கும் மேற்பட்ட ஜோதி மாணிக்கம் பெருமாள் கோவில் பங்காளிகள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானத்தை டி.சுப்புலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி அழகுமணி செல்லப்பாண்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

கொடிக்குளம் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழகேந்திரன், வெற்றிவேல், கார்த்திகேயன், நாகராஜ், பாண்டி, என்.பெருமாள்ராஜ், ராதாகிருஷ்ணன், செல்லப்பாண்டி, கே.பெருமாள் ராஜா ரகுவரன், செல்லப்பாண்டி பிரதர்ஸ் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த கோவிலில் பரம்பரை பூசாரியாக ரவிச்சந்திரன் இருந்து வருகிறார்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES