
மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ் ராம்பாபு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,அவரின் படத்திற்கு மகன் ஏ.ஜி.எஸ்.ஆர்.சச்சின் ஹரேஷ்பாபு, மகள் சுப்ரியா, மற்றும் மருமகன் அச்சுதானந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் ஏழை எளியோருக்கு வேட்டி, சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏ.ஜி.எஸ் கோபிபாபு, முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.கே. ராஜேந்திரன், தமாகா மாவட்ட செயலாளர் காந்தி, மாவட்ட தலைவர் ராஜாங்கம், காங்கிரஸ் பிரமுகர் ஐ.சிலுவை, அயல், ஈஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெகநாதன் மற்றும் சங்கர்,குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்