Friday , December 19 2025
Breaking News
Home / Politics / கல்வராயன் மலைவாழ் மக்களுடன்RGPRS அமைப்புகலாச்சார கலந்தாய்வு முகாம்
NKBB Technologies

கல்வராயன் மலைவாழ் மக்களுடன்RGPRS அமைப்புகலாச்சார கலந்தாய்வு முகாம்

ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கதன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டு மாநிலங்களும் இணைந்து ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் (இரண்டுநாள் முகாம்) கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு முகாம் நடைபெற்றது.

மலைவாழ் மக்களின் இல்லங்களில் உண்டு, உரையாடி, தங்கி அவர்களின் நிலை அறிந்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளிமலையில் நடைபெற்ற சுதந்திரதின கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகள் தீர்மானமாக வைக்கப்பட்டது.
முன்னதாக சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏற்றப்பட்டும், மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.S.சசிகுமார், புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.சு.அமுதரசன்,

YouTube player

பஞ்சாயத்துராஜ் தேசிய செயலாளர் கடலூர் க.ரமேஷ், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் N.சுகுமார், திரு.அண்ணாதுரை, ST பிரிவு மாநில பொது செயலாளர் திரு.சரவணன், வாழப்பாடி மணிமாறன், புதுச்சேரி மாநில பஞ்சாயத்து ராஜ் பொதுச்செயலாளர்கள் அரங்க.முருகையன், கோவிந்தன், புஷ்பராஜ் இவர்களுடன் தமிழ்நாடு மற்றும் புதுவை மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பஞ்சாயத்து ராஜ் காங்கிரஸ் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,

இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு பணியை
கள்ளக்குறிச்சி மாவட்ட பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் N.செந்தில்குமார் செய்திருந்தார்.

Bala Trust

About Admin

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES