Thursday , January 29 2026
Breaking News
Home / கரூர் / ரங்கமலை குரங்குகளும் மயில்களும் மற்றும் லாக் டவுன்
NKBB Technologies

ரங்கமலை குரங்குகளும் மயில்களும் மற்றும் லாக் டவுன்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சசி பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் ரங்கமலை அமைந்துள்ளது. கரூர், திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையில் உள்ள இந்த மலையின் தென்பகுதி திண்டுக்கல் வனத்துறை மேற்பார்வையிலும், வடபகுதி கரூர் மாவட்ட வனத்துறை மேற்பார்வையிலும் உள்ளது. சுமார் ஆயிரத்து ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த ரங்கமலையை பசுமையான காடு நிறைந்த இயற்கை சூழப்பட்ட நிலையில் ரங்கமலை அமைந்துள்ளது
இந்தப் பகுதியில் 1000 கணக்கான குரங்குகளும் மயில்களும் மற்றும் பல்வேறு பறவைகளும் காட்டு விலங்குகளும் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றன தற்பொழுது இந்த சூழ்நிலையில் வறட்சி காலம் மற்றும் கொரானா லாக் டவுன் ஆகி இருப்பதால் போக்குவரத்து இல்லாத சூழ்நிலை ஆகி உள்ளதால் அங்கு வசிக்கும் குரங்குகளுக்கு எந்த உணவு இன்றி உள்ளது திண்டுக்கல் மற்றும் மதுரை செல்லும் நபர்கள் அந்த பகுதியில் உள்ள குரங்குகளுக்கும் மற்றும் பறவைகளுக்கும் உங்களால் முடிந்த வரைக்கும் ஏதோ ஒரு உணவை மனிதநேயத்தோடு தந்து உதவிடுங்கள்
பள்ளபட்டி சேர்ந்த நமதுர் நண்பர்களும் அந்த பகுதியில் வசித்து வரும் குரங்குகளுக்கும் உயீரினங்களுக்கும் உங்களால் முடிந்தளவு உணவளித்து உதவிடுங்கள் என்று இப்பதிவின் மூலம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்
KING OF PALLAPATTI. வாட்ஸ்அப் குழு நண்பர்களுடன் குரங்குகளுக்கு மற்றும் மயில்களுக்கு உணவளித்த போது நேரடியாக பார்த்தோம் அதன் நோக்கமாக இங்கு பதிவாக செய்யப்பட்டுள்ளது செல்வந்தர்களும் தன்னாளவர்களும் சமூகஆர்வலர்களும் கொடைவள்ளல்களும் மனிதநேயம் கொண்டவர்களும் தாராளமாக உதவி வனவிலங்குகளின் பசியை போக்க உதவிடுங்கள் இறைவன் அருளை பெற ! நன்றி !!!
Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES