Tuesday , July 29 2025
Breaking News

2024 மக்களவை தேர்தல் தேதி | தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட வாய்ப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2024 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மாநில வாரியான கள ஆய்வை தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. …

Read More »

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: குமரியில் நாளை காங்கிரஸ் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை: “தமிழக அரசு கேட்ட மழை, வெள்ள நிவாரணத் தொகை ரூ.37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கன்னியாகுமரியில் நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2019 -ம் ஆண்டு …

Read More »

சுமார் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக இரண்டு நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள், இராயபுரம் மண்டலம், வார்டு-56க்குட்பட்ட பி.ஆர்.என்.கார்டன், பிரகாசம் சாலையில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்ட நிதியின் கீழ், ரூ.2.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் …

Read More »

தென் இந்திய பார்வர்ட் ஃபிளாக் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் ஜி பிறந்தநாள் விழா : ஏராளமானோர் வாழ்த்து..!

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சிவபாக்யா மஹாலில் தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத்தலைவர் கே சி திருமாறன் ஜி தலைமையில் 10 வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் கே.சி.திருமாறன் ஜி அவர்களின் 50-வது பிறந்த நாள் விழா என்பதால் கேக் வெட்டி அவரின் பிறந்த நாளை நிர்வாகிகள் கோலாகலமாக கொண்டாடினர். மேலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் ஏராளமானோர் வந்திருந்து தலைவர் …

Read More »

நெல்லை மேட்டுப்பட்டி M.A.S.முத்துக்குமார் சாருமதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

மதுரையில் பாப்பீஸ் ஹோட்டலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நெல்லை மேட்டுப்பட்டி M.A.S.முத்துக்குமார் சாருமதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக மதுரை ரிங் ரோட்டில் உள்ள பாப்பீஸ் ஹோட்டலில் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக பல்வேறு சமூக சேவைகள் செய்தோர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வின் போது பல்வேறு சமூகப்பணிகளை செய்து வரும் நெல்லை மேட்டுப்பட்டி M.A.S.முத்துக்குமார் சாருமதி அவர்களுக்கு …

Read More »

திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மகளிர் தின விழா

மதுரை மாவட்டம்,திருமங்கலம் நகரில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பில் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளி யில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசிக்கும் ஏழை எளிய முதியோர்களுக்கு நாள்தோறும் உணவு இலவசமாக வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பில் மாலை நேர பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் தின விழா நிகழ்வுகள் திருமங்கலம் வள்ளலார் மாலை நேர பயிற்சி …

Read More »

தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக கீதா முருகன் நியமனம்..!

தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கீதாமுருகன் அவர்களை அமைப்பின் தேசிய பொது …

Read More »

தமிழ்நாடு மாநில சேர்மனாக மருத்துவர் கஜேந்திரன் நியமனம்…!

தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில சேர்மனாக மதுரையை சேர்ந்த மருத்துவர் கஜேந்திரன் அவர்களை, அமைப்பின் தேசிய பொது இயக்குனர் சர்க்கார் பட்னாவி அவர்கள் நியமனம் செய்துள்ளார்.

Read More »

மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்

துவரிமானில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை, மார்ச்.07- பாஜக மதுரை மாநகர் மாவட்ட பரவை மண்டல் துவரிமான் கிளை சார்பாக மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மண்டல் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ்கண்ணன், விவசாய அணி மாவட்ட தலைவர் துரை பாஸ்கர், எஸ்.டி அணி மாவட்ட பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். …

Read More »

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண்கள் உரிமை காக்கப்படும். டாக்டர் சரவணன் பேட்டி..!

விடியா திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழ்நாடு திகழ்கிறது எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண் உரிமை காக்கப்படும், பாதுகாக்கப்படும் கழக மருத்துவரணி இணை செயலாளர் பா.டாக்டர் சரவணன் பேட்டி மதுரை,மார்ச்.07- உலக பெண்கள் தினம் மார்ச் 8 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது, அந்த பெண்கள் தினத்தை கொண்டாடக்கூடிய தகுதி அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES