தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை நடத்தினர். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 54 பறக்கும் படை குழுக்கள், 54 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் …
Read More »தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது தமிழையே ஏமாற்றப் பார்க்கிறார்: முரசொலி விமர்சனம்
சென்னை: தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது தமிழையே ஏமாற்றப் பார்க்கிறார் என முரசொலி குற்றம் சாடியுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள முரசொலி தலையங்கத்தில் ‘தாய்மொழி தமிழ்மொழியாக இல்லையே என்று வருத்தப்படுகிறேன்’ என்று பிரதமர் சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1500 கோடி ஒதுக்கும் மோடி, தமிழ் வளர்ச்சிக்கு ரூ.67 கோடிதான் ஒதுக்கி இருக்கிறார். அப்போது எங்கே போனது தமிழ்ப் பாசம்? 2008ம் ஆண்டு நடந்த …
Read More »Temporary Teachers: தற்காலிக ஆசிரியர்கள், பள்ளி இறுதி நாள் வரை பணிபுரிய உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பள்ளி இறுதி நாள் வரை பணிபுரிய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் நகராட்சி / அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் 2023- 2024ஆம் கல்வியாண்டில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்காலிப் …
Read More »IPL 2024 : தோல்வி உறுதினு தெரிந்தே தோனி களத்திற்கு வந்தார்.. ஏன் தெரியுமா? ராயுடு சொன்ன சீக்ரெட்!
விசாகப்பட்டினம் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்வி உறுதி என்றே தெரிந்தே தான் தோனி களமிறங்கியதாக முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார். 17வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் தோல்வியை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட் மற்றும் டேவிட் வார்னரின் அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் …
Read More »AAI Recruitment:490 பணியிடங்கள்; இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
இந்திய விமான நிலையங்களில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நாளை (02.04.2024) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணி குறித்த கூடுதல் விவரங்கள் ஜூனியர் உதவியாளர் (Architecture) – 03 ஜூனியர் உதவியாளர் (Engineering- Civil) – 90 ஜூனியர் உதவியாளர் (Engineering- Electrical) – 106 ஜூனியர் உதவியாளர் (Electronics) – 278 ஜூனியர் உதவியாளர் (Information Technology) – 13 மொத்த பணியிடங்கள் – …
Read More »SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு. இன்று முதல் அமலுக்கு வரும் கட்டண உயர்வு.!!!!
SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி மற்ற வங்கியின் ATM- களில் மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம். இதற்கு மேல் மற்ற வங்கியின் ஏடிஎம்களை பயன்படுத்தினால் 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும், எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களுக்கு 10 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி …
Read More »உத்கல் தினம்.. காங்கிரசுடன் இணைந்து, ஒடிசாவின் பொற்காலத்தை மீண்டெடுக்க வேண்டும்: ராகுல் காந்தி வாழ்த்து
டெல்லி: உத்கல் தினத்தையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது; ஒடிசா கலாச்சார மற்றும் இயற்கை பன்முகத்தன்மை மற்றும் ஒரு பொன்னான வரலாற்றுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில மக்களுக்கும் உத்கல் தின நல்வாழ்த்துக்கள். ஒடிசா மக்கள் கடின உழைப்பாளிகள், அவர்களுக்கு திறன் உள்ளது, ஆனால் வாய்ப்பு இல்லை. மாநில இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர், மாநிலம் முழுவதும் நீண்ட …
Read More »மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: இந்து தமிழ் திசை நாளிதழுக்கு முதலமைச்சர் பேட்டி!
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலில் கூறியதாவது: 1. சமூகநீதிக் கூட்டமைப்பு எனத் தொடங்கியது முதல், இந்த இந்தியா கூட்டணிக்கான முழு முயற்சியும் எடுத்தது நீங்கள்தான். இந்த முயற்சி முழு வெற்றி பெற்றுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஆமாம்! எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இந்தியா முழுக்கவே பிரிந்து இருப்பதால்தான் …
Read More »தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!
Tollgate: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் அரியலூரில் மணகெதி, திருச்சியில் கல்லக்குடி, வேலூரில் வல்லம், திருவண்ணாமலையில் இனம்கரியாந்தல், விழுப்புரத்தில் தென்னமாதேவி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் …
Read More »தமிழகத்தில் ராகுல், கார்கே பிரச்சார திட்டம் தயார்
தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த திட்டத்தை தயாரித்து, ஒப்புதலுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம் தொடங்குகிறார். வரும் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சில …
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்