இந்திய விமான நிலையங்களில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நாளை (02.04.2024) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணி குறித்த கூடுதல் விவரங்கள் ஜூனியர் உதவியாளர் (Architecture) – 03 ஜூனியர் உதவியாளர் (Engineering- Civil) – 90 ஜூனியர் உதவியாளர் (Engineering- Electrical) – 106 ஜூனியர் உதவியாளர் (Electronics) – 278 ஜூனியர் உதவியாளர் (Information Technology) – 13 மொத்த பணியிடங்கள் – …
Read More »SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு. இன்று முதல் அமலுக்கு வரும் கட்டண உயர்வு.!!!!
SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி மற்ற வங்கியின் ATM- களில் மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம். இதற்கு மேல் மற்ற வங்கியின் ஏடிஎம்களை பயன்படுத்தினால் 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும், எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களுக்கு 10 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி …
Read More »உத்கல் தினம்.. காங்கிரசுடன் இணைந்து, ஒடிசாவின் பொற்காலத்தை மீண்டெடுக்க வேண்டும்: ராகுல் காந்தி வாழ்த்து
டெல்லி: உத்கல் தினத்தையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது; ஒடிசா கலாச்சார மற்றும் இயற்கை பன்முகத்தன்மை மற்றும் ஒரு பொன்னான வரலாற்றுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில மக்களுக்கும் உத்கல் தின நல்வாழ்த்துக்கள். ஒடிசா மக்கள் கடின உழைப்பாளிகள், அவர்களுக்கு திறன் உள்ளது, ஆனால் வாய்ப்பு இல்லை. மாநில இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர், மாநிலம் முழுவதும் நீண்ட …
Read More »மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: இந்து தமிழ் திசை நாளிதழுக்கு முதலமைச்சர் பேட்டி!
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலில் கூறியதாவது: 1. சமூகநீதிக் கூட்டமைப்பு எனத் தொடங்கியது முதல், இந்த இந்தியா கூட்டணிக்கான முழு முயற்சியும் எடுத்தது நீங்கள்தான். இந்த முயற்சி முழு வெற்றி பெற்றுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஆமாம்! எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இந்தியா முழுக்கவே பிரிந்து இருப்பதால்தான் …
Read More »தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!
Tollgate: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் அரியலூரில் மணகெதி, திருச்சியில் கல்லக்குடி, வேலூரில் வல்லம், திருவண்ணாமலையில் இனம்கரியாந்தல், விழுப்புரத்தில் தென்னமாதேவி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் …
Read More »தமிழகத்தில் ராகுல், கார்கே பிரச்சார திட்டம் தயார்
தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த திட்டத்தை தயாரித்து, ஒப்புதலுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம் தொடங்குகிறார். வரும் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சில …
Read More »நரேந்திர மோடி மிரட்டி, பணம் பறிக்கும் கும்பலை வழிநடத்துகிறார்.. ‘Click Here’ டிரெண்ட் மூலம் மக்களுக்கு செய்து சொன்ன காங்கிரஸ்..!!
டெல்லி: எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் Click Here டிரெண்டிங் என்றால் என்ன?. நடப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? என்பதை பாப்போம். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு சுவாரசியமான கருத்து அல்லது நகைச்சுவை துணுக்கு டிரெண்டாவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக எக்ஸ் வலைதளத்தில் இளைய தலைமுறையினரால் டிரெண்ட் செய்யப்படுவது தான் Click Here அதாவது எக்ஸ் வலைத்தளத்தில் Click …
Read More »ரூ.52,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!
சென்னை: சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.680 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. கடந்த வியாழக்கிழமை முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ.50,000-ஐ தொட்டு அதிர்ச்சி அளித்துள்ளது. தொடர்ந்து, மறுநாளே ரூ.51,000-ஐ எட்டியது. சனிக்கிழமை சற்று குறைந்து ரூ.50,960-க்கு விற்பனையான நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தேர்தல் களத்தில் சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்! ஒரு கிராம் தங்கம் ரூ.85 அதிகரித்து ரூ.6,455-க்கு விற்பனையாகிறது. …
Read More »“அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும்” – பிரியங்கா
பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: ராமாயணத்தில் ராவணனிடம் படை பலம், ஆயுத பலம், ஏராளமான செல்வம் குவிந்திருந்தது. பகவான் ராமரிடம் உண்மை, நம்பிக்கை, பொறுமை, வீரம் மட்டுமே இருந்தது. இறுதியில் ராமர்தான் வெற்றி பெற்றார். தேர்தலில் உண்மையை முன்வைத்து, மக்களை நம்பி களமிறங்கி உள்ளோம். 5 கோரிக்கைகள்: அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் வருமான வரித் துறை, …
Read More »வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்களை அறிய புதிய செயலி அறிமுகம்!
வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்கள் குறித்து அறிய செயலி தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை …
Read More »