Tuesday , July 1 2025
Breaking News
Home / செய்திகள் (page 71)

செய்திகள்

All News

12/10/2023 அன்று சிறை நிரப்பும் போராட்டம் : தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு.!

மதுரையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை அம்பிகா தியேட்டர் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்நோக்கு சேவை மையம் திட்டத்தின் கீழ் தேவையற்ற வேளாண் உபகரணங்கள் டிராக்டர், லாரி, பிக்கப் வேன், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை வாங்க கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிடுதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மதுரை மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்,தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 2.500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமை வகித்தார்.

ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் உதயகுமார் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய குழுவின் அறிக்கை இணை விரைவில் பெற்று ஊதிய உயர்வு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.

சங்கங்களின் தவணைத் தவறிய நகைகளை ஏலமிட்ட வகையில் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையினை நட்ட கணக்கிற்கு கொண்டு செல்லும் வகையில் நிபந்தனைகளை தளர்த்தி புதிய உத்தரவு பிறபிக்கப்பட வேண்டும்.

சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்பிட வேண்டும்.

பயிர் கடன் தள்ளுபடியில் விதிமீறல் எனக்கூறி செயலாளர்களின் பணி ஓய்வு காலத்தில் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

25/2/2001க்கு பின்னர் பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.

பணியாளருக்கு பதவி உயர்வு வழங்குவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகளை நீக்கி அனைவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் 12/10/2023 அன்று மாநிலம் முழுவதும் சுமார் 40,000 பணியாளர்கள் 7 மண்டலங்களில் இருந்து கலந்து கொண்டு சிறை நிரப்பும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.என நிர்வாகிகள் கூறினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட செயலாளர் கணேசன், தேனி மாவட்ட தலைவர் அருணகிரி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் யோகசரவணன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் மதுரை திருச்சிற்றம்பலம், சிவகங்கை பிரிட்டோ, ராமநாதபுரம் முத்துராமலிங்கம், புதுக்கோட்டை நெடுமாறன், திண்டுக்கல் சுப்பையா, தேனி முருகன் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மதுரை மாவட்ட பொருளாளர் பாரூக் அலி நன்றி கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

கரூரில்,முதலமைச்சர் உத்தரவை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்

This image has an empty alt attribute; its file name is image-3-1024x576.png

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அரசு அலுவலகங்களில் மனு அளிக்க வரும் பொதுமக்களின் மனுக்களை மனுக்களாக பார்க்காமல், அவர்களது பிரச்சனைகளாக அரசு அதிகாரிகள் அணுக வேண்டும்.

மனு அளிக்க அரசு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை, இருக்கை அளித்து அமர வைத்து அவரிடம் மனுக்களை பெற்று, மனுக்களை ஆராய்ந்து, அவர்கள் குறைகள் குறித்து கனிவுடன் கேட்டு, சட்டப்படி வாய்ப்பு உள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்களை வரிசையாக இருக்கை அமைத்து, அதில் அவர்களை அமர வைத்து  மனுக்களை பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் நேர்காணல் செய்து சட்டப்படி வாய்ப்பு உள்ளவர்களுக்கு அதனை நிறைவேற்றி தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் முதன்முதலாக இத்தகைய செயல்பாடு நடந்ததை கண்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு, தங்களது குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.


The certificate awarding ceremony was held at FEDCROT office,Madurai

The certificate awarding ceremony was held at FEDCROT office, Madurai

Fedcrot conducted certificate distribution program. sponsored by national jute board.

24 women trained for 50 days to produce free jute bags was held at Fedcrot Office in S.S Colony, Madurai under the leadership of Managing Director M.A Subburaman.

General Secretary Angusamy gave the welcome speech. Ayyappan, Chief Marketing Officer, National Jute Board, Calcutta, who was the chief guest, inaugurated the function by lighting the lamp.

In this, KVIC Assistant Director Anbuchezhiyan,
Union Bank of India Senior Manager Amesh Kumar was present.

end of the program, Fedcrot Treasurer Krishnaveni gave vote of thanks.
Arrangements for the program were made by secretary Saralruby, vice president Martin Luther King, coaches Vijayavalli and Kannan.

மதுரையில் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ரமேஷ் சிமெண்ட் ஏஜென்சி இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி.!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வி.ஐ.பி சிட்டியில்,தி இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ரமேஷ் சிமெண்ட் ஏஜென்சி இணைந்து நடத்திய கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த மதர்லேண்ட் சி.சி அணிக்கும்,2 ஆம் இடத்தை பிடித்த ஸ்மார்ட் சி.சி அணிக்கும் வெற்றி கோப்பையை ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் அவர்கள் வழங்கி பாராட்டினார்.

மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்.!

கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையத்தில்
இரண்டு நாட்களாக நடைபெற்ற
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கயல்விழி
செல்வராஜ் பங்கேற்று சிறப்பித்தார்

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த வாரம் செப்.28.மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.

செப்.28-ந் தேதி
தியாகி இம்மானுவேல் சேகரனார் அரங்கில் நடைபெற்ற
முதல்நாள் நிகழ்ச்சிக்கு
ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில மகளிரணி தலைவி சாரதா தலைமை தங்கினார்.
கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்,
முத்தாரம் வரவேற்புரை ஆற்றினார்.
மேட்டுப்பாளையம் நகரமன்ற துணைத்தலைவர் அருள்வடிவு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

மாநிலத் துணைத் தலைவர் ரஜினிகாந்த் மற்றும் மாநில மகளிரணி துணைச் செயலாளர்
சரவணா செல்வி ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியில்
தொகுப்புரை ஆற்றினர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற ‘நிகழ்ச்சியில் சங்கத்தின் எதிர்கால திட்டமிடுதல் குறித்து சங்கத்தின் மாநில மகளிரணி செயலாளர் முத்துச்செல்வி, மாணவர்களிடத்தில் ஆசிரியைகளின் செயல்பாடு குறித்து திருச்சி மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி, சங்கத்தில் ஆசிரியைகளின் செயல்பாடு குறித்து சங்கத்தின் மாநில துணை தலைவர் ஆதவன், சமூகத்தில் மகளிரின் செயல்பாடு குறித்து கோவை மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் செல்வி. பிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியில் மாநில மகளிரணி துணை செயலாளர் சாந்தி நன்றி உரையுடன் முதல் நாள் நிகழ்வு பெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்வு செப்.29-ந் தேதியன்று காலை 9.30 மணியளவில் தந்தை ஈ.வெ.ர. பெரியார் அரங்கில் மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமையில் துவங்கியது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வரவேற்புரையாற்றினார். மதுரை மாவட்ட செயலாளர் கருப்பையா தொகுப்புரை வழங்கினார்.

தொடர்ந்து சங்கத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாநில இணைய ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் உரையாற்றினார்.
மாநில பொதுக்குழு தீர்மானங்களை மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை வாசிக்க தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


முடிவில் மாநில பொருளாளர் முருகன் சங்கத்தின் வரவு – செலவு அறிக்கையினை வாசித்தார்.
இதனை தொடர்ந்து
மாநில மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

சிறிது நேரம் தேநீர் இடைவேளைக்கு பிறகு மாநில பொதுக்குழுவின் அடுத்த நிகழ்ச்சி நண்பகல் 11.15 மணியளவில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் அரங்கில் மாநில தலைவர் பூவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்கள். திருச்சி மாவட்ட செயலாளர் பிரேம்குமார் தொகுப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தி கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் நகர்மன்றதலைவர் மெகரிபா பர்வீன், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ. ரவி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி , மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஒய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி உத்திராபதி மற்றும் தமிழக அரசின் முதன்மை கணக்கு அலுவலர் முனியசாமி ஆகியோர்
கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.ம்ம்ஞ்மம்ம்பள

தொடர்ந்து, சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் சங்கத்தின் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை முன் மொழிந்தார். திருச்சி மாவட்ட தலைவர் செந்தில், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் மணிகண்டன், விழுப்புரம் மாவட்ட தலைவர் குமரேசன் ஆகியோர் சங்கத்தின் எதிர்காலத் திட்டமிடல் குறித்து மதிப்புமிக்க கருத்துகளை பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கயல்விழி செல்வராஜ், சங்கத்தின் முக்கியமான, நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சங்கர சபாபதி தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மேட்டுப்பாளையம் நகர்மன்றத் தலைவர் மற்றும் தோழமை சங்கத்தலைவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தொடர்ந்து, தோழமை சங்க நிர்வாகிகள் விவேக், சுதாகர், திருக்குமரன், துரை கருணாநிதி, தாமஸ், நிர்வாக சங்கத்தின் மாநில தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் அருண், டேனியல், ராஜன்சிங் , நிர்வாக ஊழியர் சங்க முன்னாள் தலைவர் ராஜசேகரன், SC மற்றும் ST வருவாய் துறை சங்க நிர்வாகி தனலட்சுமி, கோவை தனி வட்டாட்சியர் மாலதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்வின் இறுதியில் மாநில செய்தி ஊடக பிரிவு செயலாளர் சிங்கபாண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.

தமிழகம் முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில்
இருந்து சுமார் 600 க்கும் மேற்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் தங்கும் அறைகள் மற்றும் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு முன்னெடுத்து சென்ற கோவை மாவட்ட தலைவர் ஜெகதீஸ்வரன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஜெயசந்திரன், மாநில நிர்வாகிகள் அன்பழகன் மகேந்திரன் உள்ளிட்ட கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக நன்றியும், பாராட்டுக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்…

தேசிய சணல் வாரியம் பெட்கிராட் இணைந்து ஜூட் பேக் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா.!

பெட்கிராட் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா

தேசிய சணல் வாரியம் பெட்கிராட் இணைந்து இலவச ஜூட் பேக் தயாரிப்பதற்கு 50 நாட்கள் பயிற்சி பெற்ற 25 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள பெட்கிராட் கூட்டரங்கில், நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். கல்கத்தா தேசிய சணல் வாரிய தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அய்யப்பன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில் :-
பயிற்சிக்கு பின் சுய தொழில் துவங்க அனைத்து முயற்சிகளையும் செய்து வெற்றி பெற வேண்டும்.என பேசினார்.

கே‌.வி.ஐ.சி உதவி இயக்குனர் அன்புச்செழியன் பேசும்போது :- மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று தொழிலை திறம்பட செய்ய வேண்டும் என கூறினார்.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா முதுநிலை மேலாளர் அமேஷ்குமார் பேசும்போது :- பெண்கள் சுயதொழில் துவங்க மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன் கடன் வழங்க பரிந்துரை செய்யும் போது அதை பெண்கள் பயன்பெறும் வகையில் முத்ரா லோன் தர தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியின் முடிவில் பெட்கிராட் பொருளாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் சாராள்ரூபி, துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங், பயிற்சியாளர்கள் விஜயவள்ளி, கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….

100 நாள் வேலைத் திட்டம் | “தமிழகத்தில் 9 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை” – ஜோதிமணி எம்.பி காட்டம்

கரூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, 2 மாதத்துக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், கடுமையான பொருளாதார நெருடிக்கடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். நாடு முழுவதும் இத்திட்டத்தில் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். இதில் 91 லட்சம் பேர் தொடர்ச்சியாக வேலை செய்து வருகின்றனர்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 60,000 பயனாளிகள் உள்ளனர். இதில் 25,000 பயனாளிகளை நேரில் சந்தித்துள்ளேன். இதனால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். இதில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கக்கோரி கடந்த செப்.13-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதினேன். இதுவரை பதிலில்லை.

நாடு முழுவதும் உள்ள வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு ஊதியமாக வழங்க மட்டும் ஆண்டுக்கு ரூ.2.10 லட்சம் கோடி செலவாகும். இதுவன்றி அப்பணிகளுக்கும் நிதி தேவை. ஆனால் ரூ.60,000 கோடி மட்டுமே இப்பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021-22ம் நிதியாண்டை விட 18 சதவீதம் குறைவு. மோடி ஆட்சியில் 23 கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டனர். மிக வேதனையானது. மத்திய அரசு இதற்கு பதில் தரவேண்டும். உடனடியாக ஊதிய பாக்கியை வழங்கவேண்டும்.

காவிரி கோரிக்கையை கர்நாடகா அரசு ஏற்காதது அநீதியானது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரை எம்.பிக்கள் சந்தித்தோம் தமிழகத்துக்கு கர்நாடகா அரசு அநீதி இழைக்கிறது. காவிரியில் 12,000 கனஅடி நீர் திறக்கவேண்டும் என்ற நிலையில் 5,000 கன அடி திறக்கவேண்டும் என உத்தரவிடுவது தவறாகும். இது சலுகை அல்ல. உரிமை. தமிழகத்தின் காவிரி கடைமடை வரை விவசாயத்திற்கும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடிநீருக்கும் ஆதாரமாக காவிரி உள்ளது. கர்நாடகாவில் 1 டிஎம்சி, 2 டிஎம்சி நீர் தேக்கக்கூடிய சிறு அணைகள் உள்ளன. இவற்றை மத்திய அரசு கருத்தில்கொள்ள வேண்டும். மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும்.

காவிரி விவகாரத்தில் பாஜக அரசியல் பிரச்சினையாக இல்லாமல் மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். தமிழகத்துக்கு எதிரான போக்கை கைவிடவேண்டும். கர்நாடகா அரசு இவ்விகாரத்தில் சட்டப்படி, நியாயப்பட்டி, அரசியல் சாசனப்படி செயல் படவேண்டும்.

டெல்லியில் ஊடகவியலாளர் வீட்டில் அத்துமீறி நுழைந்து லேப்டாப், மொபைல் போன்வற்றை உளவுப் பிரிவினர் கைப்பற்றியுளனர். இவ்விகாரத்தில் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை அடையப்போகிறது. அதனையொட்டியே இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது” என்றார் ஜோதிமணி. கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மகாத்மா காந்தி, காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!

மதுரை ஆழ்வார்புரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர், நடிகர் திலகம் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவும், முன்னாள் பாரத பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாளும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினமும் அறக்கட்டளை அலுவலகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது

பின்னர் காந்தி மியூசியத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் பிறகு மதுரை விளக்குத்தூணில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அவர் நினைவு தினத்தை போற்றி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மீர் பாஷா, மணிமாறன், கே.ஆர்.சுரேஷ் பாபு, பூக்கடை கண்ணன், வீர வாஞ்சிநாதன், மற்றும் வர்த்தக பிரிவு காங்கிரஸ் மாவட்ட தலைவர் வேல்பாண்டி மற்றும் போஸ் கந்தவேல் ராஜா கிருஷ்ணகுமார் பாலமுருகன் கருப்பாயூரணி மாரிக்கனி சரவணன் சரவணராஜ் இளைஞர் காங்கிரஸ் குரு பிரசாத் லெனின் கனகராஜ் முத்துக்குமார் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

மதுரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொண்டாடினர்

அந்த வகையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக வடக்கு மாவட்ட தலைவர் சாமுவேல் என்ற சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கர்ம வீரர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள சங்க அலுவலகத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் பிரசில்லா, கணேசன், கார்மேகம் ஜி, சந்திரன், முத்துராஜ், சக்திவேல், லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பழுதான வேளாண்மை இயந்திரங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரையில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பழுதான வேளாண்மை இயந்திரங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டனர்

பழுதாகி செயலற்று கிடக்கும் உழவு இயந்திரம், டிராக்டர், துணை கருவிகள், கதிர் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்கள், நடவு இயந்திரங்கள் போன்ற வாகனங்களின் சாவியை மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து டாக்பியா மாவட்ட செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் கூறுகையில் :-

தமிழகத்தில் 4300க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், சுமார் 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்களும் அடித்தட்டு விவசாய
பெருமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு துணை நின்று பயிர்க்கடன், கால்நடை
வளர்ப்பு, நீர்ப்பாசன வசதி, நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு, மாற்றுத்திறனாளி
கடன்கள் வழங்குவதுடன், உரம் விநியோகம், அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்,
பொதுசேவை மையம் என பல்வேறு பணிகளுடன் அரசு அவ்வப்போது அறிவிக்கும்
எந்தவொரு திட்டத்தையும் நேரம் காலம் பாராது உழைத்து வெற்றிகரமாக செயல்படுத்தி
ஏற்கனவே இது பல்நோக்கு சேவை மையங்களாக செயல்பட்டு வருகிறது.

இச்சங்கங்கள் வெற்றிகரமாக செயல்படுத்த இயலாமல் தோல்வியுற்ற ஒரே திட்டம், கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சேவை மையம் என்ற திட்டமாகும். இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் வாங்கப்பட்ட (திணிக்கப்பட்ட) உழவு இயந்திரம், டிராக்டர், துணைகருவிகள், கதிர் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்கள்,நடவு இயந்திரங்கள் பல லட்சங்களை நட்டப்படுத்தி சங்க வளாகங்களில் பயனற்று
துருப்பிடித்து பயன்படுத்த இயலா நிலையில் குவிந்து கிடக்கிறது.
இச்சங்கங்களில் சுமார் 18000 பணியாளர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், 7000 பணியாளர்களே பணிபுரிந்து வரும் நிலையில், பல இடங்களில் ஒரே பணியாளர்
ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களில் பெரும் பணிச்சுமையுடன் பணியாற்றுவதால் கடன்
வசூல், சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் கவனம் செலுத்த இயலாமல் தொய்வு ஏற்பட்டு
மன உளைச்சலில் பணிபுரிந்து வரும் நிலை உள்ளது.


இந்நிலையில் ஏற்கனவே பலமுறை செயல்படுத்தி தோல்வியுற்ற இத்திட்டங்களை
பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுதல் என்ற திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 1000
கோடி ஒதுக்கி குறீயீட்டை எய்த கூட்டுறவுத் துறையின் அனைத்து நிலை
அதிகாரிகளும் மீண்டும் லாரி, டிராக்டர், அறுவடை இயந்திரங்கள், டிரோன், என
ஒவ்வொரு சங்கங்கமும் 2 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீட்டில் செயல்படுத்த
கட்டாயப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டு திட்டம்
செயல்படுத்தப்பட வேண்டும்.
சங்கங்களின் எதிர்காலத்தை பற்றி கவலைகொள்ளாமல் கட்டாயப்படுத்துவதை
கைவிடக்கோரி கடந்த 25ம் தேதி மண்டல இணைப்பதிவாளர்களிடம் பெருந்திறள்
முறையீடு செய்தோம்.

அதன்பின்னரும் தீர்வு காணப்படாததால் இன்று 03.10.2023
முதல் ஏற்கனவே வாங்கப்பட்டுள்ள கருவிகளை மண்டல இணைப்பதிவாளர்
அலுவலங்களில் ஒப்படைத்துவிட்டு, இத்திட்டம் கைவிடப்படும் வரை அல்லது
ஒழுங்குப்படுத்தப்படும் வரை அனைத்துப்பணியாளர்களும் ஒட்டு மொத்த விடுப்பில்
செல்கிறோம்.

இம்மாவட்டத்தில் 170 சங்கங்களும் 500 பணியாளர்களும்
இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம்.

சங்கங்களைக் காக்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு நல்ல தீர்வு காணும்
வரை போராட்டம் தொடரும். அடுத்தகட்ட போராட்டம் குறித்து மாநில தலைமை முடிவு
செய்யும் என கூறினார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES