ஏப்ரல் 19இல் தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனுவை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் யாருக்கும் அனுமதியில்லை. வேட்பாளருடன் 5 நபர்கள் மட்டுமே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 27 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 19இல் தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் ஒருசில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணியுடன் நிறைவடைகிறது.
உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் மலேசியன் சிலம்ப அசோசியேசன் இணைந்து நடத்திய உலக நடுவர்கள் பயிற்சி முகாம் சென்னையில் வேர்ல்ட் யூனிவர்சிட்டி சர்வீஸ் சென்டரில் 15 to 17-03-2024 தேதி வரை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக TAFISA தேசியத் தலைவர் SARAF இந்த நடுவர் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து நடுவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வாழ்த்தினார்.
இதில் International Silambam Fedaration, Chairman சிவகுமார், தலைவர் சந்திரன், செயலாளர் டாக்டர் சுரேஷ் மற்றும் Technical Chairman ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு 60 மேற்பட்ட நடுவர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்பட்டது .
மேலும் உலக சிலம்ப விளையாட்டு சங்கத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் தலைவர் முத்துராமன் ஜி அவர்களை நேரில் சந்தித்து உலக சிலம்ப விளையாட்டு போட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
மேலும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் இருந்து வரக்கூடிய குழந்தைகளை தேர்வு செய்து இப்போட்டியில் பங்கு பெற செய்ய வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தனர். அவருடன் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக நிர்வாகிகள் செயலாளர்கள் நடுவர் பெருமக்கள் பலர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், இலக்கியச் செல்வர் டாக்டர். குமரி அனந்தன் அவர்களின் 92-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., திரு. சு. திருநாவுக்கரசர், எம்.பி., மற்றும் திரு. இ.எம். சுதர்சன நாச்சியப்பன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், எம்.பி., டாக்டர் ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திரு. இ. எர்ணஸ்ட் பால் தொகுப்புரை நன்றியுரை நிகழ்த்தினர். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள், மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
இன்று இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி வேட்பாளர் திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்து தெரிவித்தோம். நகர தலைவர் முத்துவிஜயன் , நகர கவுன்சிலர் பத்மினி முருகானந்தம், நகர கவுன்சிலர் மகாலட்சுமி மாசிலாமணி, நகர மேற்கு மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலதண்டபாணி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் நேரு, சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பாலமுருகன் மற்றும் கலந்து கொண்ட அத்தனை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் நன்றி என்று பழனி K.குணசேகரன் முன்னால் காங்கிரஸ் தொழிற்சங்க மாநில செயலாளர் தெரிவித்தார்.
மதுரை மத்திய சிறையில் நபார்டு தேசிய வங்கி நிதி உதவியுடன்,சாஜர் அறக்கட்டளை சார்பாக ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் 30 நாள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கப்பட்டது.
மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் அவர்கள் சிறையில் உள்ள போதே வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் சிறுதானிய உணவு பொருட்கள் தயார் செய்யப்படும் பயிற்சி வகுப்பு மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு நபார்டு தேசிய வங்கி நிதி உதவியுடன், சாஜர் அறக்கட்டளை சார்பாக 30 நாள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
அதன் துவக்க நாளான நேற்று மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் மற்றும் சாஜர் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஜாஸ்மின் ராஜ்குமார் மற்றும் நபார்டு வங்கி துணை பொது மேலாளர் சக்திபாலன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
கே.ஆர்.எஸ் மருத்துவமனை H.R.திவ்யா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் சாஜர் டிரஸ்ட் சி.இ.ஓ ஆர்.நசீம்பானு நன்றி கூறினார்.
இந்த பயிற்சி வகுப்பில் மதுரை மத்திய சிறை, பெண்கள் தனி சிறை சிறைவாசிகள், தலா 25 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
இதில் சிறுதானிய சத்துமாவு, கஞ்சி மிக்ஸ், சப்பாத்தி மிக்ஸ், அடை தோசை, மிக்ஸ், பணியாரம் மிக்ஸ், குதிரைவாலி சேவ், ஜிலேபி, குலோப் ஜாமூன், திணை அதிரசம்,வரகு அரிசி முறுக்கு, கவுனி அரிசி அல்வா, கட்லெட் ஆகியவை தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சியின் போது சிறுதானிய மூலம் தயார் செய்யப்படும் இனிப்பு கார வகைகள் உணவு வகைகள் ஆகியவை தயார் செய்யும் முறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் இவர்கள் மூலம் தயார் செய்யப்படும் சிறுதானிய உணவுப் பொருட்கள் மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் சிறை சந்தையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வைக்கப்படும் என சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
திருச்சியில் மார்ச் 22ஆம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜுன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக இறுதி செய்துள்ளது.
இதனிடையே வேட்பு மனுத்தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 30-ம் தேதி வெளியாக உள்ளது. அதன் பிறகு தேர்தலுக்கு 17 நாள்கள் மட்டுமே உள்ளன.மார்ச் 24 முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் இபிஎஸ்!
இதனை கருத்தில் கொண்டு மார்ச் 22 முதல், முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி அருகே சிறுகனூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து சொந்த ஊரான திருவாரூரில் 23-ம் தேதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேச உள்ளார்.
பின்னர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.
உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் தான் ‘The G.O.A.T’
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .
AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது இப்படம் குறித்த தாறுமாறு அப்டேட் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றுள்ளார்.திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது .
விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசலில் அவர் இருந்த கார் சிக்கிக் கொண்டு நகர முடியாமல் தவித்துள்ளது. அதன் உள்ளே இருந்த விஜயும் இதனால் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் வந்த கார் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி நொறுங்கியுள்ளது. காரின் பின்பகுதி முன் பகுதி என பல இடங்களிலும் சேதம் அடைந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மதுரை மாவட்டம் பரவையில் ஏ.பி.டி.மோட்டார்ஸ் சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது
மதுரை மார்ச்.18-
மதுரை பரவையில் ஏபிடி குழுமத்தின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் உதிரி பாகங்கள் விற்பனை, சர்வீஸ் வசதிகளுடன் கூடிய புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் தனராஜ் சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜாத் ரஹ்மான், தலைவர், மதுரை லாரி உரிமைய்ளர்கள் சங்க தலைவர் சாத்தையா, மதுரை டூரிஸ்ட் கேப் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமநாதன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா குறித்து ஏபிடி மோட்டார்ஸ் லிமிடெட் இயக்குநர் நடேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- சக்தி குழுமம் 100 ஆண்டுகள் பழமையான ஒரு மதிப்புமிக்க நிறுவனமாகும். அதன் பங்களிப்புடன் ஏ.பி.டி. நிறுவனம் கனரக வாகனங்கள் விற்பனை, சேவை, உதிரிபாகங்கள் போன்ற பல்வேறு வணிகங்களைக் கையாளும் மிகவும் பிரபலமான நிறுவனமாக உள்ளது. இப்போது நாங்கள் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியிருக்கிறோம். ஏ.பி.டி. மோட்டார்ஸ் அனைத்து மல்டிபிராண்ட் வாகனங்களுக்கும் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு மதுரை மாவட்டம் பரவையில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து மல்டிபிராண்ட் கனரக வாகனங்களுக்கான சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பி.எஸ்.6 வாகனங்களும் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படும் அனைத்து சென்சார்கள் மற்றும் சில்லுகளைப் புரிந்துகொள்ள சமீபத்திய மென்பொருளின் உதவியுடன் மட்டுமே முழுமையாக கண்டறியப்படுகின்றன.
எல்லா நேரங்களிலும் உதிரிபாகங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அனைத்து உதிரி சப்ளையர்களுடனும் நாங்கள் கைகோர்த்துள்ளோம். பாடி பில்டிங், சேவைகள், உதிரிபாகங்கள், நிதி, காப்பீடு, எப்.சி.மற்றும் ஆர்.டி.ஓ. தொடர்பான பிற வேலைகளை பாஸ்ட் டேக்குகளில் சேர்த்துக் கொள்வதால் இச்சேவை கிடைக்கிறது. பேருந்து உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பலர் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர்.
வருங்காலத்தில் அனைத்து சாலையோரப் பணிமனைகள் மற்றும் மெக்கானிக்குகள் தங்கள் வணிகத்தை நடத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும், எனவே அவர்களுக்கு உதவுவதற்கும் ஆதரவளிப்பதற்கும், மேலும் ABT TN இன் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் இந்த சேவையை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஏபிடி இண்டஸ்ட்ரீஸ் பொது மேலாளர் உதய சந்திரன், துணை பொது மேலாளர் வசந்த் குமார், மற்றும் சக்தி பைனான்ஸ் விவேக் கிருஷ்ணன் உடனிருந்தனர்.
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை அரசரடியில் உள்ள தனியார் அரங்கில் மாநில தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமையிலும்,மாநில துணைத்தலைவர் ஆசிரியர் மாணிக்கராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் உமா மகேஸ்வரி, மகளிரணி பிரிவு மாவட்ட தலைவர் சங்கரேஸ்வரி, மகளிரணி பிரிவு மாவட்ட செயலாளர் விஜயா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலதிபர் ராஜ்குமார், சாதனை படைத்தவர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
அரசு வழக்கறிஞர் கணேஷ்பாபு புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரும்,மாநில கண்காணிப்பாளருமான ஆர்.ராமன் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட தலைவர் முருகேசபாண்டியன் நன்றி கூறினார்.