Monday , July 28 2025
Breaking News
Home / Politics / தமிழ்நாட்டில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு
NKBB Technologies

தமிழ்நாட்டில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு

ஏப்ரல் 19இல் தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனுவை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் யாருக்கும் அனுமதியில்லை. வேட்பாளருடன் 5 நபர்கள் மட்டுமே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 27 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 19இல் தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் ஒருசில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணியுடன் நிறைவடைகிறது.

Bala Trust

About Admin

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES