Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் (page 89)

செய்திகள்

All News

மதுரையில் THE KING RASHID INTERNATIONAL COLLEGE சார்பாக குழந்தைகள் தின விழா.!!

மதுரையில் இயங்கி வரும் THE KING RASHID INTERNATIONAL COLLEGE
சார்பாக
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு YMCA பள்ளியில் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடினர்.
இந்த நிகழ்வில் கல்லூரியின் நிறுவனர் முனைவர் k ஜாபர் ஷெரிப், பள்ளியின் முதல்வர் ஜொய்ஸ் மேரி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவினை கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜாஹிர் ஹுசைன், விமான பொறியாளர் அம்ஜத் ஹுசைன், கல்லூரியின் பொறுப்பாளர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் சூர்யா மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரியின் நிறுவனர் அவர்கள் இந்த விழாவை வழிநடத்திய இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஈஷா பிரியதர்ஷினி மற்றும் அணைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மதுரையில் THE KING RASHID INTERNATIONAL COLLEGE சார்பாக குழந்தைகள் தின விழா.!

மதுரையில் இயங்கி வரும் “THE KING RASHID INTERNATIONAL COLLEGE”
சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு YMCA பள்ளியில் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் நிறுவனர் முனைவர் k ஜாபர் ஷெரிப், பள்ளியின் முதல்வர் ஜொய்ஸ் மேரி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவினை கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜாஹிர் ஹுசைன், விமான பொறியாளர் அம்ஜத் ஹுசைன், கல்லூரியின் பொறுப்பாளர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் சூர்யா மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரியின் நிறுவனர் அவர்கள் இந்த விழாவை வழிநடத்திய இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஈஷா பிரியதர்ஷினி மற்றும் அணைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மதுரையில் THE KING RASHID INTERNATIONAL COLLEGE சார்பாக குழந்தைகள் தின விழா.!!

மதுரையில் இயங்கி வரும் THE KING RASHID INTERNATIONAL COLLEGE
சார்பாக
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு YMCA பள்ளியில் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் நிறுவனர் முனைவர் k ஜாபர் ஷெரிப், பள்ளியின் முதல்வர் ஜொய்ஸ் மேரி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவினை கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜாஹிர் ஹுசைன், விமான பொறியாளர் அம்ஜத் ஹுசைன், கல்லூரியின் பொறுப்பாளர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் சூர்யா மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரியின் நிறுவனர் அவர்கள் இந்த விழாவை வழிநடத்திய இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஈஷா பிரியதர்ஷினி மற்றும் அணைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாமன்னர் மணிக்குறவர் 69-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு பாஜக ஓபிசி அணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

மாமன்னர் மணிக்குறவர் 69-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தத்தனேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக ஓபிசி அணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் ஓபிசி அணி மாநில பொருளாளர் மோகன்குமார், மாவட்ட துணைத் தலைவர் பாலன் ரேடியோஸ் உரிமையாளர் பாலமுருகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சாமிக்கண்ணு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அலங்கை பொன்.ரவி செய்திருந்தார்.

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.!


மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் உலக கருணை தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு தலா ஒரு அரிசி மூடை என மூன்று மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மூன்று அரிசி மூடைகளை வழங்கினார்.

இது குறித்து வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்:
நமது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட செயல்பாடுகளை யாரிடமும் நன்கொடைகள் பெறாமல் எனது தனிப்பட்ட சேமிப்பு மூலமாக அவ்வப்போது சேமிக்கும் சிறு சிறு தொகையை பொருத்து தொடர்ந்து பல உதவிகள் செய்து வருகிறேன்.

அந்த வகையில் உலக கருணை தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு குழந்தை, ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மற்றும் ஒரு தவழும் மாற்றுத்திறனாளி ஆகிய மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு அரிசி மூட்டையாக மூன்று அரிசி மூடைகள் வழங்கப்பட்டது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிம்மக்கல் முதியோர் இல்லம் மேலாளர் கிரேசியஸ், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் ஷேக் மஸ்தான் மற்றும் மாற்றம் தேடி பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வழிகாட்டி மணிகண்டனுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம்.!

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் காமராஜர் சாலை சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் செய்திருந்தார்.

மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவில் “LYKA MULTI SPECIALITY PET HOSPITAL” திறப்பு விழா.!

மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவில் “LYKA MULTI SPECIALITY PET HOSPITAL” திறப்பு விழா நடைபெற்றது. டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் பிரதியூஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட டாக்டர் விஜயலட்சுமி, கமலா, சுகன்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்,

விழாவிற்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் திருமதி ஹரிபிரியா வெங்கடேஸ்வரன் வரவேற்றனர். இவ்விழாவில் நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை 20-வது வார்டு விளாங்குடியில், அதிமுக பகுதி செயலாளர் கே.ஆர்.சித்தன், 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு தலைமையில் புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்.!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9-ம் தேதி தொடங்கியுள்ளது. வரும் டிச.8-ம் தேதி வரை ஒரு மாதம் வரை இப்பணி நடைபெறுகிறது.

இக்காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வழங்கலாம்.

இதற்கிடையில், பணிக்கு செல்வோர் வசதிக்காக, தமிழகம் முழுவதும் இன்று நவம்பர்.12 ஆம் தேதி, நாளை நவ.13-ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அந்த வகையில் மதுரை மாநகராட்சி 20-வது வார்டு விளாங்குடியில், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைப்படி, மேற்கு 6-ஆம் பகுதி செயலாளர் கே.ஆர்.சித்தன் மற்றும் 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு ஆகியோர் தலைமையில் புதிய வாக்காளர் சேர்க்கை,பெயர் திருத்தம்,நீக்கம், சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் 1-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மலைச்சாமி, 20-வது அவைத்தலைவர் கரிசல்பட்டி சேகர், மேற்கு 6-ம் பகுதி எம்ஜிஆர் இளைஞரணி பகுதி செயலாளர் பில்டர் கண்ணன், 20- வது வார்டு நிர்வாகிகள் அழகர்,ராசு, மற்றும் 1-வது வார்டு அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி அருகே உள்ள விவசாய அணி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!!

மதுரை கீழக்குயில்குடி நான்கு வழிச்சாலை அருகே சீனிவாசா காலனியில் உள்ள பாஜக விவசாய அணி அலுவலகத்தில், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜன் மற்றும் மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவர் ஆகியோர் வழிகாட்டுதலின் படி, நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது அதிமுக வழக்கறிஞர் பிரிவு மதுரை புறநகர் மாவட்ட இணைச் செயலாளர் வக்கீல் தர்மர் பாஜக விவசாய அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் விவசாய அணி முன்னாள் மாநகர் தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் புறநகர் மாவட்ட தலைவர் பூமிராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே “Mega Steel Kitchen Equipments” திறப்பு விழா.!

மதுரை பழங்காநத்தம் டி.பி.கே மெயின் ரோடு அழகப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே “Mega Steel Kitchen Equipments” திறப்பு விழா நடைபெற்றது.


திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர்களை நிறுவனத்தின் உரிமையாளர் நாகசெல்வம் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

இவ்விழாவில் நிர்வாக மேலாளர் முகமது மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


இங்கு ஹோட்டல்களுக்கு தேவையான அனைத்து வகையான எஸ்.எஸ் கிச்சன் மெட்டீரியல்ஸ் அனைத்தும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES