Saturday , January 31 2026
Breaking News
Home / இந்தியா / தொடங்கியது போர் – தடுப்பூசிக்கு எதிராக தமிழ்நாட்டில்…
NKBB Technologies

தொடங்கியது போர் – தடுப்பூசிக்கு எதிராக தமிழ்நாட்டில்…

தமிழ்நாட்டில் தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் கராத்தே கண்ணதாசன் தடுப்பூசிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் விழிப்புணர்வு போஸ்டர்கள் அடித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்திருப்பது மக்களின் கவனத்திற்கு சென்றடைந்து கொண்டு இருக்கிறது.

கொரோனா, ஓமிகிறான் தடுப்பூசிகள் உயிர் பறிக்கும் ஊசி என்றும், ஆக்ஸிஜன் கிடைப்பது தடுக்கும் என்றும், மூச்சுத் திணறல் உண்டாக்கி உயிர் பறிபோகும் என்ற வாசகங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இரண்டு ஊசி போட்டவர்களுக்கு கூட மீண்டும் கொரோனா மீண்டும் வந்திருப்பது இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது என்றும் பரவலாக கருத்துக்கள் மக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்பதை மறுக்கவும் முடியாத சூழலில் உலகம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது என்பதில் ஐயமில்லை என்றும் திரு கராத்தே கண்ணதாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தடுப்பூசி, மாஸ்க் போன்ற சர்வதேச மோசடி நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் இருப்பதாகவோ அல்லது ஓமிகிறான் வைரஸ் இருப்பதாகவோ அல்லது ஏற்கனவே இருந்ததாகவோ ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுப் பவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் பரிசினை தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் கராத்தே கண்ணதாசன் அதிரடியாக ஒரு அறிவிப்பை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். அவர் அடித்த சுவரொட்டியில் நம்பக தகுந்த ஆதாரங்களுடன் தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் 9445435588 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES