Monday , June 9 2025
Breaking News
Home / தமிழகம் / கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்;

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்;

கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்;
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயத்திற்குட்பட்ட சித்தலவாய் கிராமம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவக்குளத்திலும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். கிருஷ்ணராயபுரம் வட்டாச்சியர் பழனி முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடனும்,வழிக்காட்டுதலின்படி நடக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அரசு மக்கள் குறைகளை தீர்க்க இந்த சிறப்பு திட்டத்தினை கொண்டு வந்துள்ளார். தமிழகம் முழுவதும் நடக்கும் இந்த திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் முதலமைச்சரின் நேரடிப்பார்வையின் கீழ் நடைபெறுகிறது.பெறப்படும் மனுக்களிலிருந்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு செப்டம்பர் மாத இறுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.இது அரசியல் நிகழ்ச்சி அல்ல அரசு நிகழ்ச்சி பொதுமக்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாலை வசதி, சாக்கடை வசதி குறித்தும் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். அனைவரது கோரிக்கைகளையும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று கூறினார். பின்னர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் முதியோர் உதவி தொகை, திருமண உதவி தொகை, பசுமை வீடு, வேளாண், மின்சாரம் குறித்து மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. பின் பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். தோட்டக்கலை உதவி அலுவலர் அரவிந்த், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் பானு ஜெயராணி, வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவகுமார், கூட்டுறவு சங்க பிரதிநிதி தங்கதுரை, மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.

செய்தி ; ஜாகீர் உசேன்

படம் : சிவா

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES