Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34_வது அமைப்பு தின விழா

மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34_வது அமைப்பு தின விழா

மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34_வது அமைப்பு தின விழா சங்க தலைவர் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தெற்கு வட்டக் கிளையின் செயலாளர் பழனிவேல் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் பரமசிவன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சீனியப்பா கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க கொடியை ஏற்றி வைத்து இந்த கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்க உரை நிகழ்த்தினார்.

சங்க மாநில செயலாளர் நவநீதகிருஷ்ணன் அகில இந்திய அரசு ஊழியர் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அமைப்பு தின விழா வாழ்த்துரை நிகழ்த்தினார். இறுதியாக சங்க பொருளாளர் மணிகண்டன் நன்றியுரை தெரிவித்தார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES