Saturday , March 21 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தனியார் வங்கிகளுக்கு நிகராக புதிய 2 மொபைல் வங்கி துவக்கம்: மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தகவல்
NKBB Technologies

மதுரையில் தனியார் வங்கிகளுக்கு நிகராக புதிய 2 மொபைல் வங்கி துவக்கம்: மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தகவல்

மதுரையில் தனியார் வங்கிகளுக்கு நிகராக புதிய 2 மொபைல் வங்கி துவக்கம்: மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் கூறினார்

மதுரை ரயில் நிலையம் அருகில் இருக்கக்கூடிய மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் இன்று
16வது நிர்வாக குழு கூட்டம் வங்கியின் இரண்டாவது தளத்தில் நடைபெற்றது

மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் எம் எஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில்

வாடிக்கையாளர்களுக்கான புதிய திட்டங்கள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு நிகராக கொண்டு வரப் போகும் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

கூட்டத்தின் முடிவில் பேட்டி அளித்த போது

மதுரை மாநகரில் கூடல் நகரில் புதிய கிளை விரைவாக துவங்கப்பட உள்ளது என்றும், தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பகுதி மற்றும் மதுரையில் உள்ள ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் புதிய ஏடிஎம்கள் அமைய உள்ளன என்றும் தெரிவித்தார்.

மேலும் தனியார் வங்கிகளுக்கு இணையாக வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப புதியதாக இரண்டு மொபைல் வங்கிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்றும்

புதிய கணக்குகள் தொடங்குதல் காசோலை மாற்றம் உட்பட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளும் அந்த மொபைல் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்

மேலும் மாற்றுத்திறனாளிகள் கணவரால் கைவிடப்பட்டோர் விதவைகள் உள்ளிட்ட நபர்களுக்கு குறைந்த வட்டி கடன் மற்றும் வட்டி இல்லா கடன் ரூபாய் 50 ஆயிரம் வரை வழங்கப்படும் என்றார்

நலிந்த நிலையில் இருக்கக்கூடிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு தலைமை வங்கியின் மூலம் பெறப்பட்டு ரூபாய் 50 லட்சம் வரை கொடுத்து உதவு உள்ளதாக தெரிவித்தார்

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மொபைல் ஏடிஎம்கள் தற்போது எம்ஜிஆர் பேருந்து நிலையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் மக்கள் பயன்பாட்டிற்காக இருந்து வரக்கூடிய நிலையில்

ஒரு சில வாரத்தில் அறிமுகமாக போகும் மொபைல் வங்கி மக்கள் மத்தியில் குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றார்

இன்றைய போட்டி நிறைந்த உலகில் தனியார் வங்கிகளுக்கு நிகராக பல்வேறு திட்டங்களை வகுத்து வங்கி இருப்பு விகிதம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை உள்ளிட்டவர்கள் பதவி ஏற்ற நாள் முதல் தற்போது வரை உயர்ந்து கொண்டிருப்பது பெருமிதம் என்றார்

குறிப்பாக கடந்த 31.3.2019 ஆம் ஆண்டு
தலைவராக பொறுப்பேற்ற நாளில் ரூபாய் 1.064 கோடி வங்கி இருப்பு இருந்த நிலையில்

தற்போது 14,460 கோடி ரூபாய் அளவுக்கு வங்கி இருப்பு உயர்த்தப்பட்டுள்ளது

மேலும் வங்கி மூலம் வழங்கப்படும் லோன் தொகை 1275கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 2040கோடி ரூபாயாக அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது என்றார்

அதிகப்படியாக 800 கோடி ரூபாய் வரையிலும் லோன் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்வின்போது டைரக்டர்கள் எம்.எஸ்.கே.மல்லன், கார்னர் பாஸ்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES