Sunday , July 27 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிடக்கலைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்.
NKBB Technologies

மதுரையில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிடக்கலைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்.

மதுரை கரிசல்குளம் பகுதியில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிட கலைஞர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஆரப்பாளையம் சூர்யா சிமெண்ட் ஏஜென்ஸி உரிமையாளர் சாலை.சிவக்குமார் அவர்கள் தலைமை வகித்தார்.

தொழில்நுட்ப மேலாளர் ஜெயபால் முருகன் டால்மியா சிமெண்ட்டின் உயர்ந்த தரத்தைப் பற்றியும்,அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்தும் கட்டிட கலைஞர்களுக்கு விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கட்டிட கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நினைவு பரிசை சூர்யா சிமெண்ட் ஏஜென்சி உரிமையாளர் சாலை. சிவக்குமார் அவர்கள் வழங்கினார்.

இதில் தொழில்நுட்ப இன்ஜினியர்கள் சீனிவாசன், திருமேனிநாதன், ஏரியா விற்பனை அதிகாரி அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES