Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / ஆடி வெள்ளியை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவிலில் சுமங்கலி பூஜை
NKBB Technologies

ஆடி வெள்ளியை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவிலில் சுமங்கலி பூஜை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னணம்பட்டி பிரிவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சுமங்கலி பூஜை, கூழ் காய்ச்சி படைத்தல், உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.


இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த சுமங்கலி பெண்களுக்கு பாத பூஜை செய்து வரவேற்கப்பட்டது.

தொடர்ந்து குழந்தைகளை வைத்து அம்மனுக்கு 108 புஷ்பாஞ்சலி பால் பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்களும் நடைபெற்றது. காலை கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.

இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீபுரம் ஸ்ரீநிதிஅம்மா, மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்..

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES