Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பட்டிமன்ற நிகழ்ச்சி.!
NKBB Technologies

மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பட்டிமன்ற நிகழ்ச்சி.!

75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக, இன்றைய இளைஞர்கள் எங்கே போகிறார்கள் திட்டமிட்ட பாதையிலா? திசை தெரியாமலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்டமிட்ட பாதையிலே என்ற தலைப்பில் போத்திராஜன், திருமலை முருகன், மாரிக்கண்ணன் ஆகியோரும், திசை தெரியாமலே என்ற தலைப்பில், கீதா பாபு, சினேகா, கவிஞர் துர்கா தேவி ஆகியோர் பேசினர்.

இந்நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்ற டாக்டர் சண்முகம் திருக்குமரன், இளைஞர்கள் திட்டமிட்ட பாதையிலே தான் செல்கிறார்கள் என்ற தீர்ப்பை வழங்கினார்.

இந்நிகழ்வில் சபாராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியன்,தொழிலதிபர் பழனிவேல், திரைப்பட இயக்குனர் ரத்தினசாமி, முருகேசன், திருஞானசம்பந்தம்,போஸ் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் அறங்காவலர் சோலை எஸ்.பரமன் நன்றியுரை கூறினார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES