Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிறுமி.!

மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிறுமி.!

மதுரையில் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் நெல்பேட்டையில் உள்ள உணவு தயாரிக்கும் கூடத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை அப்பகுதி 49 வது வார்டு கவுன்சிலர் செய்யது அபுதாஹீர் அவர்கள் வரவேற்றார்.

அப்போது அவருடன் வந்திருந்த அவரின் பேத்தி மு.அதிபா பர்ஹானா (வயது 06) காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து கை கூப்பி நன்றி தெரிவித்தார்.

இதனால் நெகிழ்ச்சி அடைந்த முதல்வர் அந்த குழந்தையை கொஞ்சி பாராட்டினார். முதல்வரின் இந்த அருமையான திட்டத்திற்கு ஒரு குழந்தை வாழ்த்து கூறியதை அங்கிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ரசித்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES