Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / படப்பை, வஞ்சிவாஞ்சேரியில் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய 27 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி.!!

படப்பை, வஞ்சிவாஞ்சேரியில் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய 27 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி.!!

காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய 27 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி (2022) படப்பை, வஞ்சுவாஞ்சேரியில் உள்ள ராசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டிக்கு காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் வலசை முத்துராமன் ஜி அவர்கள் தலைமை வகித்தார்.

தமிழ்நாட்டு சிலம்பாட்டக் கழக பொதுச்செயலாளர் முரளி கிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்டக் கழக செயலாளர் லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்திய சிலம்ப சம்மேளன தலைவர் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர் பிரதீப் ராஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுடன் நீண்ட காலம் பணியாற்றிய
RRASE Engineering College நிர்வாக இயக்குனர் டாக்டர் ரெங்கநாதன் மற்றும் டாக்டர் ரேணூகாதேவி,
காஞ்சிபுரம் மாவட்ட பெருந்தலைவர் மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன் படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன்,கௌரவத்தலைவர் அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES