Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சிலம்பம் ஆசான் சரவணபாண்டி.!

மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சிலம்பம் ஆசான் சரவணபாண்டி.!

மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சிலம்பம் ஆசான் சரவணபாண்டி

மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்த சிலம்பம் ஆசான் டாக்டர் சரவணபாண்டி அவர்கள் கடந்த 5 வருடங்களாக இந்திய சிலம்பம் அறக்கட்டளை சார்பாக இலவசமாக சிலம்பம் கற்பித்தல் மற்றும் சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் தொடர்ந்து உணவு கொடுத்து மனித நேயமிக்க இளைஞராக செயல்பட்டு வருகிறார்.

தற்போது வர உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர் அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் பெற்றோர்களை இழந்த பள்ளி குழந்தைகளுக்கும்,வயதான ஆதரவற்ற முதியோர்களுக்கும் புத்தாடைகளை இந்திய சிலம்பம் அறக்கட்டளை சார்பாக வழங்கினார். இவரது சமூக சேவைகளை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES