Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / மரணம் அடைந்த ஆதரவற்றோர்களை தொடர்ந்து நல் அடக்கம் செய்து வரும் தன்னார்வலர்கள்!!!
NKBB Technologies

மரணம் அடைந்த ஆதரவற்றோர்களை தொடர்ந்து நல் அடக்கம் செய்து வரும் தன்னார்வலர்கள்!!!

மரணம் அடைந்த ஆதரவற்றோர்களை தொடர்ந்து நல் அடக்கம் செய்து வரும் தன்னார்வலர்களை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத மற்றும் ஆதரவு அற்ற நிலையில் மரணம் அடைந்த சுமார் ஆறு நபர்களின் உடல்களை உறவுகள் அமைப்பு மற்றும் ராயல் என்டர் பிரைஸ் & ராயல் கேட்டரிங் நிர்வாகம் சேர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து பலவிழி சுடுகாட்டுக்கு எடுத்து சென்று இறந்த உடல்களுக்கு உரிய மரியாதையுடன் நல் அடக்கம் செய்தனர்.


தொடர்ந்து இது போன்ற இறந்த போன ஆதரவற்றோர்களின் உடல்களை தகுந்த முறையில் சான்றுகள் பெற்று நல் அடக்கம் செய்து வரும் உறவுகள் அமைப்பின் நிர்வாகி வி.ஜான்சன் மற்றும் ராயல் என்டர் பிரைஸ் & ராயல் கேட்டரிங் நிர்வாகி கார்த்திக் ஆகியோரை மருத்துவமனை நிர்வாகமும் பொதுமக்களும் நன்றியோடு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES