Friday , January 30 2026
Breaking News
Home / செய்திகள் / பால் விலை உயர்வை கண்டித்து மதுரை கீரைத்துறையில் பாஜக மஹால் மண்டல் சார்பாக ஆர்ப்பாட்டம்.!!
NKBB Technologies

பால் விலை உயர்வை கண்டித்து மதுரை கீரைத்துறையில் பாஜக மஹால் மண்டல் சார்பாக ஆர்ப்பாட்டம்.!!


தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் மதுரை கீரைத்துறை பகுதியில் பாஜக மஹால் மண்டல் தலைவர் ஐ.பாலமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக நகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இந்நிகழ்விற்கு மாவட்டச் செயலாளரும், தெற்கு தொகுதி பொறுப்பாளருமான ஜனா ஸ்ரீ முருகன்,மாமன்ற உறுப்பினர் பூமா ஜனா ஸ்ரீ முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பாரி ஜெயவேல், மண்டல் செயலாளர் ஆறுமுகம், வார்டு தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டி, பி.கே கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES