Friday , December 19 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் எம்.ஜி.பாலு தனது பிறந்த நாளை முன்னிட்டு மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் அன்னதானம்.!
NKBB Technologies

மதுரையில் எம்.ஜி.பாலு தனது பிறந்த நாளை முன்னிட்டு மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் அன்னதானம்.!

மதுரையைச் சேர்ந்த எம்.ஜி.பாலு தனது பிறந்த நாளை முன்னிட்டு மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அன்னதானத்தை வழங்கினார்.



மதுரை மாவட்டம் கோவில் பாப்பாக்குடியைச் சேர்ந்த சேர்ந்த காவிரி கூட்டு குடிநீர் பராமரிப்பாளர் எம்.ஜி பாலு அவர்கள் தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள், பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள், ஆதரவற்றோர் இல்லத்திற்கு நேரில் சென்று அன்னதானம் வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்தவகையில் இன்று செவ்வாய்க்கிழமை தனது
57-வது பிறந்த நாளை முன்னிட்டு அருள்தாஸ்புரம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையத்திற்கு நேரில் சென்ற அவர் அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்வில் பாலமுருகன், துரைப்பாண்டி, முருகேசன், சரவணன், பூங்குன்றன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES