Tuesday , July 29 2025
Breaking News
Home / சேலம் / சேலம் மாவட்டம்அயோத்தியாபட்டினம் – கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால், துர்நாற்றம்
NKBB Technologies

சேலம் மாவட்டம்அயோத்தியாபட்டினம் – கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால், துர்நாற்றம்

சேலம் மாவட்டம்அயோத்தியாபட்டினம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள, தள்ளு வண்டி மற்றும் இறைச்சி கடைகளின் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மிகவும் தொந்தரவாக உள்ளது மட்டுமின்றி போக்குவரத்து வாசிகளையும் முகம் சுழிக்க வைக்கின்றது. மேலும், அருகில் கைக்குழந்தைகளும், முதியோர்களும் இருப்பதால், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில் காவல் சோதனை சாவடிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனித்து, இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
இளைஞர் குரல் செய்திகளுக்காக – R விமல்குமார்.

YouTube player
Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES