Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ மாயூரநாதர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
NKBB Technologies

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ மாயூரநாதர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ மாயூரநாதர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மாயூரம் ஸ்ரீ அபயப்பிரதாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாதசுவாமி திருக்கோவில் பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி, தகவல் தொழில்நுட்பத் துறை அரசு செயலாளரும், இந்து சமய அறநிலைத்துறை சிறப்பு அதிகாரியுமான குமரகுருபன் மற்றும் அரசு அலுவலர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் திருமுருகன்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES