Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர்
NKBB Technologies

மதுரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொண்டாடினர்

அந்த வகையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக வடக்கு மாவட்ட தலைவர் சாமுவேல் என்ற சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கர்ம வீரர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள சங்க அலுவலகத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் பிரசில்லா, கணேசன், கார்மேகம் ஜி, சந்திரன், முத்துராஜ், சக்திவேல், லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES