Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்
NKBB Technologies

திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்,அக்.22-

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார்கள் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் பி.எஸ்.என்.எ. ஆடிட்டோரியத்தில் நடந்தது.

மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரகுராம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பு செயலாளர் ரவிபிள்ளை வரவேற்றார்.


நாடு முழுவதும் இச்சமுதாயத்தின் நிர்வாகிகளை தொழில்களின் அடிப்படையில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

சங்கத்தின் நிர்வாகிகள் நடத்திவரும் கல்வி நிறுவனங்களில் இச்சமுதாயத்தினருக்கு இலவச கல்வி அளிப்பது, கல்வி அளிப்பது, மகளிருக்கு சுயசார்பு தொழில் முனைவு திட்டங்களை கொண்டு சேர்ப்பது, சட்ட உதவிகள் வழங்குவது, புதிய நிர்வாகிகள் நியமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உடனடியாக நிறைவேற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர் அணி தலைவர் வேலம்மாள், ஸ்ரீவில்லிபுத்துார் வி.பி.எம். கல்வி குழுமத் தலைவர் சங்கர், நாமக்கல் மருத்துவ குழுமத் தலைவர் டாக்டர் குழந்தைவேல், காரைக்கால் ராகவேந்திரா கல்வி குழுமத் தலைவர் இளங்கோ, ஈரோடு நுாட்பாலை உரிமையாளர் அருண், டாக்டர்கள் பழனியப்பன், ராஜவேல், வழக்கறிஞர் பிரிவு தலைவர் கற்பக ரத்னபிரியா, அபுதாபி தமிழ்சங்க நிர்வாகி சிவக்குமார், திருப்பூர் நெசவு தொழிற்காலை உரிமையாளர் ஜெயக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்….

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES